Pages

Thursday, October 29, 2015

கிறுக்கல்கள்! -50

 

எதைப்பற்றியாவது மாஸ்டர் அதிகம் பேசி இருப்பார் என்றால் அது வார்த்தைகளைப்பற்றி மட்டுமே!

வார்த்தைகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்! கொஞ்சம் அசந்து போனால் அவை தம்முடைய வாழ்க்கையை வாழும்: மினுமினுப்பு காட்டும்; மனோ வசியம் செய்யும்; பயமுறுத்தும். அவை உண்மையில் எதை பிரதிபலிக்கிறதோ அந்த பொருளிலிருந்து உங்களை வேற்றுப்பாதையில் அழைத்துப்போய் விடும்; அவை தாமே உண்மை என்று நம்ப வைத்துவிடும்”

"நீங்கள் பார்க்கும் உலகம் குழந்தைகள் பார்க்கும் ராஜ்யமான உலகம் அல்ல. வார்த்தைகளால் சுக்கு நூறாக்கப்பட்ட உடைசல்கள். ஒவ்வொரு அலையையும் கடலில் இருந்து வேறாக காட்டப்பட்டதைப்போல.

வார்த்தைகளையும் எண்ணங்களையும் அமைதியாக்கி விட்டால் அப்போது ப்ரபஞ்சம் உயிர்த்தெழும். சத்தியமாக; பூரணமான ஒன்றாக.

அப்போது வார்த்தைகளின் உண்மை ஸ்வரூபம் புலப்படும். அவை இசை அல்ல; இசைக்குறியீடுகள். உணவு அல்ல; உணவுப்பட்டியல். பயணத்தின் முடிவல்ல; வழிகாட்டி மரங்கள்!”

No comments: