Pages

Thursday, August 11, 2016

கிறுக்கல்கள் - 153





சின்ன தப்பை எல்லாம் பூதக்கண்ணாடி வெச்சு பார்த்துக்கொண்டு பெரிய தப்பை எல்லாம் கண்டுக்காம விடறவங்களை பத்தி மாஸ்டர் சொன்னார்:
உலகப்போர் நடந்தப்ப ஒரு தரம் ஏர் ரெய்ட் நடந்தது. எல்லாரையும் மடாலயத்து நிலவறைக்கு அழைச்சுக்கொண்டு போயிட்டேன். ஆனா குண்டு வீச்சோ நிக்கற வழியாக்காணோம். சாயங்காலம் ஆயிடுத்து. அதுக்கு மேலே யாருக்கும் அங்கே இருக்க பொறுமை இல்லை. குண்டு வீச்சோ இல்லையோ நாங்க வெளியே போறோம்ன்னு சொன்னாங்க. சரிப்பா; போறவங்க போங்கன்னு சொன்னேன். போன சுருக்கிலேயே எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க.

”ஓ, உங்க தப்பை உணர்ந்துட்டீங்களா?”
”ஆமா!” என்று எரிச்சலுடன் பதில் வந்தது; ”வெளியே மழை பெய்யுது!”

No comments: