Pages

Thursday, August 18, 2016

கிறுக்கல்கள் - 155




நவீன தொழிற்நுட்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மாஸ்டரை கேட்டார்கள்.
வழக்கம் போல இதுதான் பதில்:
ஞாபகமறதி பேராசிரியருக்கு திடீரென்று தான் எடுக்க வேண்டிய வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நினைவுக்கு வந்தது. அவசரம் அவசரமாக வெளியே போய் ஒரு டாக்ஸியை பிடித்தார்.
சீக்கிரம்! சீக்கிரமாகப்போ!”
டாக்ஸி உடனே கிளம்பி வேகமாக போக ஆரம்பித்தது.
ஐந்து நிமிடங்கள் கழித்தே எங்கே போக வேண்டும் என்று சொல்லவில்லை என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. பின்னே டாக்ஸி எங்கே போகிறது?
ஏன்பா, நான் எங்கே போகணும்ன்னு உனக்கு தெரியுமா?”
தெரியாதுங்க. ஆனா நீங்க சொன்னபடி நா வேகமா போய்கிட்டு இருக்கேன்!” 

No comments: