Pages

Tuesday, August 16, 2016

கிறுக்கல்கள் - 157




அணுகுண்டுக்கு எதிராக பெரிய கூட்டம் நடந்தது. மாஸ்டரும் அவரது சீடர்களும் அதில் பங்கு கொண்டனர்.
ப்ரசங்கி “அணுகுண்டுகள் மனிதர்களை கொல்லுகின்றன!” என்று முழங்கினார். பலரும் இதற்கு கை தட்டினார்கள். மாஸ்டர் தலை ஆட்டி “இல்லை. அது உண்மை இல்லை. மனிதர்கள் மனிதர்களை கொல்லுகிறார்கள்!” என்றார்.

பக்கத்தில் இருந்தவர் இவரை முறைத்துப்பார்த்தார். உடனே மாஸ்டர் “சரி சரி! அதை திருத்திக்கொள்கிறேன். எண்ணங்கள் மனிதர்களை கொல்லுகின்றன!” என்றார்.

No comments: