Pages

Tuesday, July 3, 2018

பறவையின் கீதம் - 26





அமேசான் நதியோடு போய் ஆய்வுப்பணியை மேற்கொண்டுவிட்டு திரும்பினார் ஒருவர். பலரும் ஆர்வத்துடன் சூழ்ந்துகொண்டு அது பற்றி சொல்லச்சொன்னார்கள். இவர் திகைத்துப்போனார். எதைப்பற்றி சொல்லுவது? அரிய வகை பூக்கள், இரவில் கேட்கும் பல மிருகங்களின் ஒலி, காட்டு மிருகங்கள் அருகில் செல்வது, வேகமான காட்டாறுகளின் நீரோட்டங்களில் அவசர அவசரமாக சென்ற போது - இப்படி ஏகப்பட்ட அனுபவங்களின் ஏற்பட்ட உணர்வுகளை எப்படி விவரிப்பது.
அதை சொல்லுவது கடினம். நீங்களே போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி எப்படி அங்கே போக வேண்டும் என்று ஒரு படத்தை வரைந்தார்.
அவ்வளவுதான்.
அதைப்பிடுங்கிக்கொண்டார்கள். சட்டத்தில் மாட்டி டவுன்ஹாலில் தொங்க விட்டார்கள். பிரதிகள் தயாரித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டார்கள். இப்போது அவர்கள் எல்லோருமே அமேசான் நதியை குறித்த வல்லுனர்கள் ஆகிவிட்டார்கள். அதன் ஒவ்வொரு வளைவு, ஒவ்வொரு இடத்திலும் என்ன ஆழம், எங்கே எப்படி நீரோட்டம் உள்ளது, எங்கே நீர்வீழ்ச்சிகள் உள்லன... எல்லாம் அறிந்த
புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள்.

புத்தரை பலர் பலமுறை இறைவனைக்குறித்து சொல்ல வற்புறுத்தியும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவரும் ஒரு வரைபடத்தை போடத்தயாராக இல்லை.

No comments: