Pages

Friday, July 20, 2018

பறவையின் கீதம் - 34





ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார்.  

ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உலகம் தோன்றி 5000 வருஷங்கள் ஆனதா சொல்லுது. ஆனா நாங்க சில எலும்புகளை கண்டு பிடிச்சு இருக்கோம். அது பத்து லக்‌ஷம் வருஷமா உயிரினம் இருக்குன்னு சொல்லுதே?

பண்டிதர் சொன்னார்: "கடவுள் உலகை 5000 வருஷம் முன்னே படைச்சப்ப சில பழைய எலும்புகளையும் படைச்சார். அது நாம் கடவுளை நம்பறோமா இல்லை விஞ்ஞானிகளை நம்பறோமான்னு சோதிச்சுப்பாக்க!”

முரட்டு நம்பிக்கை யதார்த்தத்தையே அசைக்கிறது!

No comments: