Pages

Saturday, July 21, 2018

இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்....




இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.”
நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம் ஒரு டிவி காட்சியில் ஒளிபரப்பி இருக்காங்க.
ஊடகங்களை நம்பாதீங்க, அஜெண்டாவோடத்தான் நிகழ்ச்சிகள் நடத்தறாங்கன்னு பல நாட்களா சொல்லிகிட்டு இருக்கேன். ஒரு விஷயத்தைப்பத்தி விவாதிக்கணும்ன்னா அது பத்தி கொஞ்சமாவது அறிவு இருக்கணும். அறிவே இல்லாத முட்டாள்களும் மடையர்களும் விவாதம் செய்யறேன்னு ஆரம்பிச்சா? இவங்க எல்லாம் ஊடகத்துறையில இருக்கறது நம்ம சாபக்கேடு! இதையெல்லாமும் மக்கள் பாக்கறாங்களே.
நான் நிகழ்ச்சியை பாக்கலை. இது ட்விட்டர்ல வெடிச்சபிறகு யாரோ போட்ட விடியோ க்ளிப்தான் பார்த்தேன்.
இவங்கதரம் இதானே? அதுல என்ன ஆச்சரியம். சரஸ்வதி நாக்கில் இருக்கான்னா.... ன்னு பேசற கும்பல்தானே? கிடக்கட்டும்.
நான் எழுதற இந்த பதிவு அந்த 'அறிவாளிகளுக்கு' இல்லை. யாருக்கானா நிஜமா யோசிக்கறவங்களுக்கு "அதானே? இதுக்கு என்ன பதில்?” ன்னு தோணி இருந்தா அவங்களுக்கானது.
அடிக்கடி நான் சொல்கிற இன்னொரு விஷயம் - ஆன்மீகத்தில பல மட்டங்கள் உண்டு அதை கலந்து குழம்பாதீங்க என்கிறது.
இது 'எல்லாம் ப்ரம்ம மயம்' லெவல் நிச்சயமா இல்லை. அடுத்து வர 'ஒரு கடவுள், அவரே எல்லாமும்' லெவலும் இல்லை. மும்மூர்த்திகள், தேவர்கள், தேவதைகள்ன்னு கடவுளை பலதா பார்க்கிற லெவல். அல்லது அதுக்கும் வித்தியாசமா எங்க ஊர்ல கோவில்ல இருக்கிற சிவன் சிதம்பரத்துல இருக்கிற சிவன்ன்னு பார்க்கிற லெவல்ன்னு கூட சொல்லலாம். வித்தியாசம் இருக்கான்னா, ஆமாம், இந்த லெவல்ல நிச்சயம் இருக்கு. ஒவ்வொரு ஸ்தலத்துக்கு ஒரு விசேஷம்தானே சொல்லறாங்க? திருமணம் ஆகணும்ன்னா இங்கே போ, கடன் தொல்லை போக அங்கே போன்னுதானே சொல்லறாங்க? இங்கே இருக்கறதும் சிவன்தானே அங்க இருக்கறதும் சிவன்தானேன்னு சொல்ல முடியாது. சிவன் ஒத்தரே; ஆனாலும் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி பலன்களையும் தருவார்.

இந்த தேவதைகளுக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அதனாலத்தான் மனிதர்களை விட வித்தியாசமா இருக்காங்க. இவங்களை மனிதன் போல உருவகப்படுத்தி பலதும் சொல்லறது எல்லாம் நம்மால சுலபமா 'ரிலேட்' பண்ண முடியணும் என்கிறதுக்குத்தான். கோபம் அன்பு முதலான பல உணர்ச்சிகளும் இருக்கறதா சொல்லறதும் இதுக்குத்தான். சாமிக்கு கோபம் வந்துடும் என்கறதும் இதுக்கேதான். அதனாலத்தான் 'கருணையே வடிவானவன்னா ஏன் கோபம் வரும், ஏன் தண்டனை கொடுப்பார்' என்கிறது எல்லாம் விதண்டாவாதமே. இவர்களுக்கு திருமணம் நடக்கறதாவும் குழந்தைகள் இருக்கறதாகவும் சொல்வது எல்லாமும் இதுக்காகவே. ஒரு சுலபமான புரிதலுக்கு.

உண்மையில கை கால்கள் தலைன்னு எல்லாம் கிடையாது. த்யான ஸ்லோகங்களில சொல்கிற வடிவங்களும் தத்வார்த்தமாகவேதான் இருக்கும். 'பரோக்‌ஷப்ப்ரியா ஹி தேவா: ' என்கிறது வேதம். மறைந்திருப்பதிலேயே பிரியம் உள்ளவர்கள். இவர்களது உண்மை ஸ்வரூபத்தை நம்மால பார்க்க முடியாது. அதற்கான சக்தி நமக்கு கிடையாது. அதை அறியக்கூடிய புலன் நமக்கு இல்லை. அவர்களை அறிய நமக்கு இந்த 5 புலன்கள் போதாது. ஒரு வேளை நம்மோட ஆன்மீக முன்னேற்றத்தால் பார்க்க முடிஞ்சாலும் அது ஒரு ஒளி மயமாகத்தான் தென்படும். அதற்கு மேல் முடியாது.

ஆகவே தேவர்களை மனிதத்தன்மை உள்ளவர்களாக நினைத்து வாதம் செய்வதில சாரமில்லை. பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் இராது என்கிறதால வெளியே போக வேண்டிய அவசியமும் இல்லை. இதுக்கும் விதி விலக்காக சில ஸ்தலங்களிலேயும் விசேஷமாக இருக்கலாம். நதியில் புது வெள்ளம் வரும்போது மாதவிடாய் அந்த தேவதைக்கு ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி விலக்கு; மாத விலக்கு இல்லை.

No comments: