Pages

Wednesday, July 18, 2018

பறவையின் கீதம் - 32





சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள்.

நண்பர் "அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்?” என்று கேட்டார்.
சாத்தான் " உண்மையின் ஒரு சிறு துணுக்கை!” என்றான்.

அது உனக்கு கஷ்டமாக இல்லையா?”
"இல்லை"
ஏன்?”
அதை வைத்துக்கொண்டு ஒரு குருட்டு நம்பிக்கையை உருவாக்கும்படி அவனை செய்துவிடுவேன்!”

மத நம்பிக்கை சத்தியத்துக்கு ஒரு வழிகாட்டி. வழியில் போகாமல் அந்த வழிகாட்டியையே கட்டிக்கொண்டு அங்கேயே இருந்தால் சத்தியத்தை தவற விட்டுவிடுவோம்.

No comments: