Pages

Monday, July 2, 2018

பறவையின் கீதம் - 25





பாலைவனத்தில் இருந்து ஞானி திரும்பி வந்தார்.  
மக்கள் கேட்டார்கள்: கடவுளை கண்டீரா? அவர் எப்படி இருக்கிறார்? விவரியுங்கள்.
ஞானி மௌனமாக இருந்தார். இதயத்தில் உணர்ந்ததை எப்படி சொல்லில் வடிப்பது? இறை சொல்லில் அடங்குமா?
வற்புறுத்தினார்கள்.
யோசித்துவிட்டு ஏதோ சொல்ல முடிந்ததை சொன்னார். அது மிகவும் குறைபாடுடையது; போறாது என்று தெரிந்தே! யாரும் தானும் உய்த்து உணர தூண்டுமோ என்னவோ?
ஆனால் மக்கள் அதை அப்படியே எழுதிக்கொண்டார்கள். அதை புனித நூல் ஆக்கினார்கள். அதை நம்பிக்கையாக மற்றவர்கள் மீது திணித்தார்கள். சிரமப்பட்டு வெளிநாடுகளுக்கு அதை கொண்டு சென்றார்கள். அந்த முயற்சியில் தம் உயிரையும் கொடுத்தார்கள்.
ஞானி வருந்தினார். மௌனமாகவே இருந்திருக்கலாமோ?

No comments: