Pages

Tuesday, July 17, 2018

பறவையின் கீதம் - 31





ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்பது வருடங்கள் ஆகுமோ நாற்பது வருடங்கள் ஆகுமோ அது விஷயமில்லை. இது ஜென் பயிற்சி முறை.

ஜென் மாஸ்டர் முன்னன் டய்ஹன் சீடன் ஷோஜுவை கூப்பிட்டனுப்பினார்.
"ஷோஜு எனக்கு வயதாகிவிட்டது; நான் போகிறேன். இனி நீதான் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தா இந்த புத்தகத்தை வைத்துக்கொள். இது ஏழு தலைமுறைகளாக குருவிடமிருந்து சீடனுக்கு என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. நானும் இதில் கூடுதலாக கொஞ்சம் எழுதி இருக்கிறேன். இது நீ எனக்கு அடுத்து வரும் குரு என மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும்.”

ஷோஜு சொன்னார்: "புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எனக்கு ஜென் எழுதிய வார்த்தைகள் இல்லாமலே வந்துவிட்டது. அப்படியே இருக்கட்டும்.”
"தெரியும் தெரியும்" என்றார் முன்னன் பொறுமையாக. "இருந்தாலும் இது ஏழு தலைமுறைகளாக வந்துக்கொண்டு இருக்கிறது. இந்தா வைத்துக்கொள்.”

இருவரும் ஒரு தீ எரிந்து கொண்டு இருந்த கணப்பின் அருகில் இருந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஷோஜு கையில் திணிக்கப்பட்ட புத்தகத்தை உடனே தீயில் வீசிவிட்டார்.

"என்ன செய்கிறாய்? உனக்குப்பைத்தியம் பிடித்து இருக்கிறது!” என்று அலறினார் முன்னன்.

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்குத்தான் பைத்தியம் பிடித்து இருக்கிறது!” என்றார் ஷோஜு!

No comments: