Pages

Monday, July 16, 2018

பறவையின் கீதம் - 30





ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்பானியர். அவர் அதிகமாக பயணம் செய்வதில்லை. எப்போதும் த்யானத்திலேயே இருப்பார். யாராவது அவரை பிடித்து சொற்பொழிவு ஆற்றச்சொன்னால் ஓரிரு சொற்களை சொல்லிவிட்டு காட்டின் வேறு தனிமையான பகுதிக்கு இடம் பெயர்ந்துவிடுவார்.

சைனாவில் இருந்து திரும்பிய பின் அவரைப் பற்றி கேள்விப்பட்டு நேரில் கொண்டுவரும்படி ஜப்பானிய சக்ரவர்த்தி ஆணை பிறப்பித்தார். அவர் வந்ததும் அரசவையில் பிரசங்கம் செய்யும்படி ஆணையிட்டார். ககுவா செய்வதறியாது பரிதாபமாக நின்றார். பின் தன் புல்லாங்குழலை எடுத்து ஒரு ஸ்வரத்தை வாசித்தார். சக்ரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு கிளம்பிப்போய்விட்டார்

கன்பூசியஸ் சொல்லுகிறார்: தகுந்த பாத்திரத்துக்கு கற்றுத்தரவில்லை என்றால் அது பாத்திரத்தை வீணடித்ததாகும். சரியான பாத்திரம் இல்லையானால் எதுவும் கற்றுத்தராதே; அது சொற்களை வீணடித்ததாகும். "Not to discuss with a man worthy of conversation is to waste the man. To discuss with a man not worthy of conversation is to waste words. The wise waste neither men nor words.” ― Confucius, The Analects

No comments: