Pages

Monday, January 10, 2011

பிறரின் சித்தத்தில் ஸம்யமம்..



 प्रत्यस्य परचित्तज्ञानम् ।।19।।
ப்ரத்யஸ்ய பரசித்தஜ்ஞாநம் || 19||

ப்ரத்யஸ்ய =ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் சித்த விருத்தியை ஸம்யமம் செய்ததால்; பரசித்த=மற்ற சித்தங்களின்; ஜ்ஞாநம் = அறிவு ஏற்படுகிறது.
பிறர் மனது எத்தகையது என்பதை அறிதலானது, ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் ஸம்ஸ்காரங்களை ஸாக்ஷாத்கரிப்பதால் ஏற்படுகிறது. அட! அதுதான் போன சூத்திரத்தில சொல்லிட்டாரே? ஏன் திருப்பி?

  न च तत्सालम्बनं तस्याविषयीभूतत्वात् ।।20।।
ந ச தத்ஸாலம்ப³நம்° தஸ்யாவிஷயீபூ⁴தத்வாத் || 20||

ஸ ஆலம்ப³நம்° = ராகம் முதலியன குடிகொண்ட; தஸ்ய = அந்த ஸம்யமத்துக்கு; அவிஷயீ பூ⁴தத்வாத் = விஷயமாக ஆகாததால்; ந ச தத் = அந்த பிறருடைய சித்தம் ஸம்யமத்தால் அறியப்பட மாட்டாது.
பிறர் சித்தம் சுத்தமாக இல்லாமையால் அதில் ஸம்யமம் செய்ய இயலாது; பொதுவாக அதை அறியலாமே தவிர அதில் ஏற்படும் சலனங்களை அறிய முடியாது.

குழப்புதா?
தெரிந்த ஏதோ ஒரு விஷயத்தில்தான் ஸம்யமம் செய்ய முடியும். தெரியாத விஷயத்தில் செய்ய இயலாது.
தன் சம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்யும் போது அதே போல் சம்ஸ்காரம் இருக்கும் பிறரின் சித்தத்தில் ஸம்யமம் ஏற்பட முடியும். அப்போது அவருடைய சித்தத்தை அறிய முடியும்.
ஆனால் தன் சித்தத்தில் ஏற்படுவதற்கு மாறான விஷயங்கள் பிறர் மனதில் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.
ஒரு காட்சியை பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் அதே மனத்தாக்கம் பிறருக்கும் ஏற்படுமேயானால் அதை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றவருக்கு வேறு மனத்தாக்கம் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.

No comments: