Pages

Wednesday, January 19, 2011

ஆந்தர சித்திகள்:



  नाभिचक्रे कायव्यूहज्ञानम् ।।29।।

நாபி⁴சக்ரே காயவ்யூஹஜ்ஞாநம் || 29||

நாபி⁴ சக்ரே = நாபியில் உள்ள சக்கரத்தில் (ஸம்யமம் செய்ய); காய வ்யூஹ = உடலைப்பற்றிய; ஜ்ஞாநம் = ஞானம் உண்டாகிறது.
நாபிச்சக்ரம் உடலின் நடுவில் இருந்து கொண்டு உடல் முழுதும் பரவியுள்ள நாடிகளுக்கு ஆதாரமாக உள்ளது. எனவே இதி ஸம்யமம் செய்ய முழு உடலைப்பற்றிய ஞானம் கிடைக்கும்.

  பசி, தாகங்களை நீக்குதல்:

कण्ठकूपे क्षुत्पिपासानिवृत्तिः ।।30।।

கண்ட²கூபே க்ஷுத்பிபாஸாநிவ்ரு«த்தி​: || 30||

கண்ட²கூபே =உள் நாக்குக்கு கீழே உள்ள கிணறு போன்ற இடத்தில் (ஸம்யமம் செய்ய); க்ஷுத் பிபாஸா = பசி, தாக; நிவ்ரு«த்தி​: = நீக்குதல் கிடைக்கிறது.

No comments: