Pages

Tuesday, January 11, 2011

கண்ணுக்கு தெரியாமல்...



  कायरूपसंयमात्तद्ग्राह्यशक्तिस्तम्भे चक्षुष्प्रकाशसंप्रयोगेऽन्तर्धानम् ।।21।।
காயரூபஸம்°யமாத்தத்³க்³ராஹ்யஶக்திஸ்தம்பே⁴ சக்ஷுஷ்ப்ரகாஶஸம்°ப்ரயோகே³'ந்தர்தா⁴நம் || 21||

காய ரூப ஸம்°யமாத் = தன் உடலின் ரூபத்தில் ஸம்யமம் செய்வதால்; தத்³ க்³ராஹ்ய ஶக்தி = அதை கிரகிக்கும் சக்தி; ஸ்தம்பே⁴ = நின்றுவிடும்; சக்ஷுஷ் ப்ரகாஶஸம்° ப்ரயோகே³ = கண்களின் ப்ரகாச சக்தி சேராமையால்; அந்தர்தா⁴நம் = கண்ணுக்கு தெரியாமல் ஆகிறது.

நம் கோட்பாடுகளின் படி ஒரு பொருளை நாம் பார்க்க வேண்டுமானால் நம்மிலிருந்து ஒரு சக்தி கிளம்பி அந்த பொருளை அடைந்து அதனுடன் சேர வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் காணப்படும். தன் உடலில் ஸம்யமம் செய்வதால் அப்படி ஒரு சக்தி தன்னுடன் சேர உடல் மறுக்கும். அதனால் அந்த உடல் பிறர் கண்களுக்குத் தெரியாது. இது போலவே எல்லா இந்திரியங்களும். ஓசை, தொடுதல், சுவை, வாசனை ஆகியவற்றில் ஸம்யமம் செய்து அவற்றை பிறருக்கு புலப்படாதபடி மறைக்க இயலும். இப்படியும் சித்திகள் உண்டு.

2 comments:

Geetha Sambasivam said...

இதுவும் ஓகே, இப்படி இருக்கிறவங்க, இருந்தவங்கனு நிறையக் கேள்விப் பட்டிருக்கேன்.

திவாண்ணா said...

:-)))