Pages

Thursday, January 13, 2011

மித்ரத்தன்மையும் கருணையும்:



 मैत्र्यादिषु बलानि ।।23।।

மைத்ர்யாதி³ஷு ப³லாநி || 23||

மைத்ரி ஆதி³ஷு =மைத்ரீ முதலானவற்றில்; (ஸம்யமம் செய்யின்) ப³லாநி = பலவிதம் (பலவிதமான சக்திகள் உண்டாகும்)

முன்பு உலகில் சுகமாக இருக்கும் சத்துக்களிடம் மித்ரத்தன்மை வேண்டும் என்று பார்த்தோம் இல்லையா? அப்படி செய்யும் யோகி அதில் ஸம்யமம் செய்யின் உலகில் உள்ள எல்லா ஜீவர்களையும் சுகம் அனுபவிப்போராக செய்யும் திறன் உண்டாகிறது.
துக்கமுளோரிடன் உள்ள துக்கத்தை போக்க வேண்டுமென பாவிப்பவனுக்கு துக்கத்தில் இருந்தோ அதன் காரணங்களில் இருந்தோ அப்பிராணிகளை காப்பாற்றும் திறன் உண்டாகின்றது. புண்ணியம் செய்வோரிடம் திருப்தியை எண்ணுபவனுக்கு எதிலும் நடுநிலை வகிக்கும் திறன் உண்டாகின்றது. பாபிகளிடம் சித்தம் செல்வது ஸம்யமம் ஆகாது. அதனால் பலனில்லை.


2 comments:

Geetha Sambasivam said...

அப்பாடா, இது ரொம்பவே நல்லாப் புரியறது! :))))

திவாண்ணா said...

:-))