Pages

Wednesday, October 31, 2012

கடவுளின் உபயோகம் - 1

 
ஒரு நாள் ஒரு இளைஞர், நவீன கல்விமுறையின் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய ஒருவர் - ஸ்வாமிகள் பால் எப்படியோ ஈர்க்கப்பட்டு அவரிடம் வந்தார். அவரிடம் அறிமுகமும் செய்யப்பட்டார். இப்படியாக ஒரு உரையாடல் துவங்கியது.

ஸ்வாமிகள்: உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் இருக்கிறது போலிருக்கிறதே? அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

இளைஞர்: அதை நான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லமுடியாது. அது தானாக போகிறது.

பொழுது போகவில்லையே என்று புகார் செய்யும் நபராக உங்களை பார்த்தால் தோன்றவில்லை.

இல்லை.

அதை கேட்க மெத்த மகிழ்ச்சி! உண்மையில் நம் வாழ்கையில் ஒவ்வொரு கணமும் எவ்வளவு விலையுயர்ந்தது என்று அறிந்தவர்கள் பொழுது சீக்கிரமாக போகிறதே என்றுதான் புகார் செய்ய வேண்டும்!

நான் அப்படியும் புகார் செய்வதில்லை!

நேரத்தை வீண் செய்பவர்கள்தான் நேரம் போகிறதைப்பற்றி புகார் செய்வார்கள். தன் நேரம் நல்லபடி செலவழிந்ததாக நினைப்பவர்களுக்கு அந்த புகார் இருப்பதே இல்லை. நீங்கள் இந்த வகை போலிருக்கிறது.

அப்படி இல்லை என்று தோன்றுகிறது. பொழுது போக்கப்பட வேண்டும் என்று தெரியும். அது நல்லபடி செலவழிந்ததா இல்லையா என்பது பொழுது போவதை பாதிப்பதில்லை. மேலும் அது நல்லபடி செலவழிந்தது, இல்லை என்று சொல்ல என்ன பிரமாணம் என்று தெரியவில்லை.

நிச்சயமாக. ஆனால் உங்கள் மன சமநிலைக்கோ அல்லது மற்றவரின் சமநிலைக்கோ பாதகம் இல்லாமல் நல்லபடி செலவழிந்தால் அது உங்களுக்கு கொஞ்சம் மன நிம்மதியை தரும்.

அது போன்ற நிம்மதி தூக்கத்தில்தான் கிடைக்கிறது.

உண்மைதான். ஆனால் நாம் எப்போதும் தூங்கிக்கொண்டு இருக்க முடியாதல்லவா? விழித்துக்கொண்டு இருக்கும் போதும் நமக்கு மன நிம்மதியை தேடுகிறோம். மனதில் ஒன்றுமில்லாமல் இருப்பது நமக்கு சாத்தியமில்லை. வெற்று மனத்தோடு நம்மால் இருக்க இயலாது. அதற்கு ஏதேனும் வேலை கொடுக்க வேண்டும். மனதின் சாந்தியை கெடுக்கக்கூடிய பொய்யான, நிஜமான விஷயமாக இல்லாமல், நமக்கு காம குரோதங்களை கிளறிவிடக்கூடியதாக இல்லாமல் இருக்க உலகத்தின் தோற்றம் போன்ற தத்துவ விஷயங்களை யோசித்தால் கெடுதலுக்கே இடமில்லாமல் இருக்கும் இல்லையா?

அது வெறும் ஊகங்களாக இருக்கும்.

இருந்தால் என்ன? அது யாருக்கும் கெடுதலை விளைவிக்காது. மனதுக்கு பாதகமில்லாத வேலை ஒன்று கிடைக்கிறது. என்னைப்போன்றவர்களில் சிலர் அதனால் உங்களுக்கு நல்லது ஏற்படுமென்று நினைக்கிறோம். அது சரியா இல்லையா என்பது இப்போது விஷயமில்லை. அப்படிப்பட்ட ஊகங்களில் கெடுதல் இருக்கிறது என்று நீங்கள் சொல்லமுடியாது.

ஆனால் அதனால் என்ன பயன்?

அதனால் பொழுது போகும். வேறு என்ன வேண்டும்? நாங்கள் சொல்வது போல அது நல்லதானால் சரி. இல்லை என்றாலும் பாதகமில்லை; நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. அதனால் நீங்கள் தத்துவம், அதை சார்ந்த புத்தகங்களை ஏன் படிக்கக்கூடாது? பொழுதை போக்குவதற்காவது?

அந்த மாதிரி புத்தகங்களை நான் படித்து இருக்கிறேன். அவை வெறும் வார்த்தை ஜாலம் நிறைந்து இருக்கின்றன.

புத்தகங்களில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? அதை உங்கள் சிந்தனையால் பெருக்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பொருளில் சில புத்தகங்களை படித்து இருப்பதால் உலகத்தின் தோற்றம் குறித்தும் இறைவன் பற்றியும் சில கருத்துக்கள் ஏற்பட்டு இருக்க வேண்டுமே?  

No comments: