Pages

Wednesday, June 15, 2016

கிறுக்கல்கள்! - 128



மாஸ்டர் தன்னுடைய இந்த கதையை தானே சொல்லுவதை பெரிதும் விரும்புவார்.
முதல் குழந்தை பிறந்தது. ஒரு நாள் குழந்தையின் தொட்டில் இருந்த அறைக்கு போன போது தன் மனைவி தொட்டில் அருகில் பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டார். அவர் முகத்தில் ஒரு பிரமிப்பு; அவநம்பிக்கை; பரவசம்; புளகாங்கிதம்!
மாஸ்டருக்கு ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது!
சத்தமில்லாமல் மெதுவாக மனைவியை அணுகி முணுமுணுத்தார் “ டியர்! நீ என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை மிகச்சரியாக நான் அறிவேன்!”
சற்று திகைத்த மனைவி சொன்னார். ஆமாம்! தொட்டில் எப்படி இவ்வளோ குறைச்சலான விலையில கிடைச்சதுன்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கேன்!

No comments: