Pages

Tuesday, June 21, 2016

கிறுக்கல்கள்! - 131


மடாலயத்தின் முன் ஒரு கும்பல் கூடி மாஸ்டரை நோக்கி பாடல்களை பாடிக்கொண்டு இருந்தது. அவர்கள் கைகளில் “ஏசுவே பதில்” என்னும் வாசகம் தாங்கிய பதாகைகள். அவர்களுள் சிடுசிடுவென்று இருந்த ஒருவரை அணுகி மாஸ்டர் கேட்டார்: "சரிதான்; ஆனா கேள்வி என்ன?"

அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு “ஏசு கேள்விக்கு பதில் அல்ல; நம் பிரச்சினைகளுக்குத்தான் பதில்” என்றார்.

மாஸ்டர் “ ஓஹோ! சரிதான். அப்படியானால் பிரச்சினைதான் என்ன?” என்று கேட்டார்!

பின்னால் சீடர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார்: “நிஜமாகவே ஏசுதான் பதில் என்றால் ஏசு என்பதன் அர்த்தம் இதுதான்; யார் பிரச்சினையை உருவாக்குகிறார்கள், எப்படி என்பதன் தெளிவான புரிதல்.”

No comments: