Pages

Thursday, July 13, 2017

ஒரு விளக்கம்.





சமீபத்தில் ஞானம் அடைவது குறித்து சில பதிவுகள் போட்டிருந்தேன். அவற்றை மொழிபெயர்க்கும் போதே கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அவை கொஞ்சம் குழப்பம் விளைவித்து இருக்கலாம். ஆகவே இது குறித்து இன்னும் கொஞ்சம் யோசித்ததில்….

 
புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் இது வேறு லெவல். ஆன்மீகத்தில் நிறைய முன்னேறி கடைசியில் ஞானம் பெறும் கட்டத்தைப்பற்றியது. அது தானாகத்தான் நிகழ வேண்டுமே ஒழிய அதை சாதகன் செய்ய முடியாது. ஞானம் பெற ஆசைகள் அடியோடு ஒழிய வேண்டுமில்லையா? ஞானம் பெற வேண்டும் என்று ஒரு ஆசை - நியாயமானதாக இருந்தாலும் அது ஆசைதானே?- இருக்கும் வரை அது எப்படி நிகழ முடியும்? அது நிகழ்ந்த பிறகு ஞானி எல்லாவற்றையும் ப்ரம்ம ரூபமாகவே காண்பதால் ஆசை என்று ஒன்று இராது.
இந்த நிலை வரும் வரை ஆன்மீக முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அர்த்தமில்லை. அப்படி ஒரு பொருளை எழுதியது உணர்த்தி இருந்தால் அது தவறு; மன்னிக்க.

நான் என்று ஒரு நினைப்பு இருக்கும் வரை கொஞ்சமாவது ஃப்ரீ வில் இருக்கிறது. அது வரை 'நாம்' செயல்களை செய்கிறோம். அதற்கான பலனும் கிடைக்கும். நான் செய்கிறேன் என்னும் நினைப்பு போய்விட்டால் அது மிகப்பெரிய ஆன்மீக முன்னேற்றம். அது பூர்ண சரணாகதியில்தான் வரும். அந்த நிலை வந்து விட்டால் எல்லாம் சுகமே! 'நாம்' என்ன செய்ய வேண்டுமோ அது செய்ய வைக்கப்படுவோம். என்ன செய்யக்கூடாதோ அதை செய்ய மாட்டோம். அதெப்படி என்றால் அதை இறைவன் பார்த்துக்கொள்கிறான்

இந்த 'நான்' போவது மிக மிக கஷ்டம். சரி அது வரை என்ன செய்ய வேண்டும் என்றால் தர்ம சாஸ்த்திரத்தில் சொல்லி இருப்பது போல செய்ய இயன்ற வரை செய்ய முயற்சிக்க வேண்டும். இங்கே ஞானம் பெற ஒண்ணும் உன்னால் செய்ய முடியாது என்பது அப்ளை ஆகாது. ஏன் என்றால் இது ஆரம்ப அல்லது இடை நிலை. இதை எல்லாம் செய்து செய்து நல்லது கெட்டது எல்லாம் நடந்து, கர்மா நிறைய கழிந்து, சித்த சுத்தி ஏற்படும் வரை நம் கையில் செய்வதற்கு எதோ இருக்கிறது. அதன் பின் வரும் ஞானம் எப்போ எப்படி எங்கே வரும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. இதுவே சொல்ல வந்தது.

No comments: