Pages

Monday, June 4, 2018

பறவையின் கீதம் -10





ஒரு சன்னியாசியிடம் ஒரு இளைஞன் வந்தான்.
நான் பல வருஷங்களாக கடவுளைத்தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் இருக்குமிடமாக சொல்லும் எல்லா இடங்களுக்கு போயிருக்கிறேன். கோவில்கள், மலையுச்சிகள், பாலை வனங்கள், அடந்த காடுகள் நதிகள்... போகாத இடமில்லை!”
கடவுளை கண்டு பிடித்தாயா?”
"இல்லையே! நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?”
மாலை சூரியன் தன் பொன்னொளியை மரக்கிளைகளூடாக அந்த அறையில் பரப்பிக்கொண்டு இருந்தான். ஆல மரத்தில் நூறு கிளிகள் சப்தமிட்டுக்கொண்டு இருந்தன. தூரத்தில் இடி இடித்துக்கொண்டு இருந்தது. ஒரு கொசு ரீங்காரமிட்டு எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தது. இவனோ இங்கே உட்கார்ந்து கொண்டு கடவுளை காணவில்லை என்கிறான்! இவனிடம் என்னத்தை சொல்ல என்று சன்னியாசிக்கு தோன்றியது.
சற்று நேர மௌனத்துக்குப்பிறகு அந்த இளைஞன் வருத்தத்துடன் விடை பெற்றான்.


No comments: