Pages

Tuesday, June 26, 2018

பறவையின் கீதம் - 21





கப்பல் கவிழ்ந்து போய் ஒரு கடல் வணிகன் இலங்கையில் ஒதுங்கினான். அப்போது அங்கே விபீஷணன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். வீரர்கள் வணிகனை கொண்டு போய் விபீஷணன் எதிரில் நிறுத்தினர். விபீஷணர் மிகவும் சந்தோஷமடைந்தார். இவர் என் ராமன் மாதிரியே இருக்கிறார் என்று கூறி அரச உடைகளை அணிவித்து நகைகளையும் அணிவித்தார்.

ராமக்ருஷ்ணர் இந்த கதையை கேட்டபின் சொன்னார்: “ முதன் முறை இந்த கதையை கேட்ட போது புளகாங்கிதம் அடைந்தேன். ராமரை களிமண் சிலையில் பார்க்க முடியுமானால் மனிதனில் ஏன் பார்க்கக்கூடாது?

No comments: