Pages

Thursday, June 7, 2018

பறவையின் கீதம் - 13





மாஸ்டரிடம் சீடர் புகார் செய்தார். “ஜென் என்பது என்பதன் கடைசி ரகசியத்தை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள்!” 

மாஸ்டரின் மறுப்புகளை அவன் ஏற்கவில்லை.

ஒரு நாள் இருவரும் குன்றுகளில் உலாவிக்கொண்டு இருந்தனர். எங்கே ஒரு பறவை பாடுவது கேட்டது.

பறவை பாடுவதை கேட்டாயா?” என்றார் மாஸ்டர்.
ஒரு சில கணங்கள் கழித்து சீடர் சொன்னார்: “கேட்டேன் குருவே!”
"நான் உன்னிடம் எதையும் மறைக்கவில்லை என்று உணர்ந்து கொண்டாயா?”
ஆம் குருவே!”

நீங்கள் உண்மையிலேயே ஒரு பாடலை கேட்டாலோ அல்லது மரத்தை பார்த்தாலோ ... உங்களுக்கு புரியும். வார்த்தைகளுக்கும் கருத்துகளுக்கும் அப்பாற்பட்டு.
என்ன சொன்னீர்கள்? நீங்கள் நூறு பறவைகளின் பாடல்களை கேட்டு இருக்கிறீர்களா? ஆயிரம் மரங்களை பார்த்து இருக்கிறீர்களா?

நீங்கள் மரத்தை பார்த்தீர்களா அல்லது மரம் என்னும் அடையாளத்தை பார்த்தீர்களா? நீங்கள் மரத்தை பார்க்கையில் மரத்தை மட்டும் பார்த்தால் .... உண்மையில் நீங்கள் அதை பார்க்கவில்லை. மரத்தை பார்க்கபோய் படைப்பின் அற்புதத்தை பார்த்திருந்தால் - ஹும்! கடைசியாக இப்போதாவது பார்த்திருப்பதாக சொல்லலாம். பாடும் பறவையின் கீதத்தை கேட்டபோது உங்கள் இதயம் சொற்களற்ற அற்புதத்தால் நிறையவில்லையா?

No comments: