Pages

Friday, June 1, 2018

பறவையின் கீதம் - 9





மாஸ்டரை ஒருவர் கேட்டார்: ஆன்மீக வழி என்பது என்ன?
உள்ளே மாற்றத்தை கொண்டு வருவது எதுவோ அதுவே ஆன்மீக வழி.
ஏன்? கடந்த கால மாஸ்டர்கள் சொன்ன வழிகளை கடைபிடித்தால் நான் ஆன்மீகவாதி இல்லையா?
அது உன்னுள்ளே மாற்றத்தை ஏற்படுத்தவில்லையானால் அது ஆன்மீகம் இல்லை. ஒரு போர்வை உனக்கு கதகதப்பை தரவில்லையானால் அது போர்வை இல்லை.
அப்போ ஆன்மீக வழி மாறுமா என்ன?
மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வழியும் மாறிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக இப்போது ஆன்மீகம் என்று எதை குறிப்பிடுகிறார்கள் என்றால் கடந்த கால வழிகளைத்தான்.

செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்ட முடியாது!

No comments: