Pages

Tuesday, November 13, 2018

பறவையின் கீதம் - 63





காங்கிரஸ் ஹாலில் குருஷேவ் ஸ்டாலினை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் ஒருவர் "காம்ரேட் குருஷேவ், ஸ்டாலின் களங்கமற்ற மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருந்தபோது நீங்கள் எங்கே போனீர்கள்?” என்று கேட்டாராம்.

குருஷேவ் சற்று தாமதித்தார். பின் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு சொன்னார்: “கேள்வி கேட்ட ஆசாமி கொஞ்சம் எழுந்து நிற்க முடியுமா?”

யாரும் அசையக்கூட இல்லை. அரங்கில் இறுக்கம் அதிகரித்தது.

பின் குருஷேவ் சொன்னார்: “ சரி சரி, நீங்க யாரா இருந்தாலும் இப்ப விடை கிடைச்சாச்சில்லை? நீங்க இப்ப இருக்கற நிலையிலத்தான் நானும் இருந்தேன்!”

No comments: