Pages

Tuesday, November 20, 2018

பறவையின் கீதம் - 68






இதை முன்னேயே படித்திருப்பீர்கள்.

ஒரு கிராமத்து இளம்பெண் கர்ப்பமாகி பிரசவித்து விட்டாள். நிறைய அடி உதை வாங்கிய பின் கர்ப்பத்துக்கு காரணம் கிராமத்துக்கு சற்றே வெளியே இருந்த ஜென் மாஸ்டர் என்று சொன்னாள்.

கிராமவாசிகள் எல்லாரும் திரண்டு அங்கு போயினர். தியானத்தை கலைத்து "நீ ஒரு போலி" என்று திட்டி நீ உண்டாக்கிய குழைந்தையை நீயே வைத்துக்கொள் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஜென் மாஸ்டர் 'நல்லது நல்லது' என்று சொன்னபடி குழந்தையை தூக்கிக்கொண்டார். பக்கத்து வீட்டுப்பெண்மணியுடன் குழந்தையை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

அவரது பெயர் கெட்டுப்போயிற்று. மாணவர்கள் ஒவ்வொருவராக விலகிவிட்டுப்போயினர்.
இப்படியாக ஒரு வருடம் கழிந்த பின் குழந்தையின் தாயால் அதை தாங்க முடியவில்லை. குழந்தையின் தந்தை பக்கத்து வீட்டுக்கார பையன்தான் என்று உண்மையை பெற்றோரிடம் தெரிவித்தாள்.

கிராமவாசிகள் எல்லோரும் போய் ஜென் மாஸ்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். குழந்தையை திருப்பி வாங்கிக்கொள்வதாக சொன்னார்கள்.
மாஸ்டர் 'நல்லது நல்லது' என்று சொன்னபடி குழந்தையை கொடுத்துவிட்டார்.
ஞானி!

No comments: