Pages

Tuesday, November 27, 2018

பறவையின் கீதம் - 72





ஒரு உப்பு பொம்மை ஆயிரம் மைல்கள் நடந்து கடலின் ஓரத்துக்கு போயிற்று. அதற்கு கடலைப்பார்த்து ஒரே ஆச்சரியம். அது வரை அது போல அலையும் எதையுமே பார்த்ததில்லையே!
உள்ளே வந்து பார்!” என்றது கடல்.
பொம்மையும் உள்ளே இறங்கியது.
உள்ளே போகப்போக அது கரைய ஆரம்பித்தது. அதன் கடைசி துணுக்கு கரையும் முன் அது கடலைப்பார்த்து சொன்னது "நான் யார்ன்னு இப்ப புரிஞ்சு போச்சு! ஆமா நீங்க யார்?”

No comments: