Pages

Monday, November 19, 2018

பறவையின் கீதம் - 67





காலை மணி ஒன்பதாகியும் நசருதீன் எழுந்திருக்கவில்லை. சூரியன் உதயமாகி வெகு நேரம் ஆகிவிட்டது. பறவைகள் மரங்களில் பாடிக்கொண்டு இருந்தன. காலை உணவு ஆறிப்போய்க்கொண்டு இருந்தது. அதனால் அவரது மனைவி நசருதீனை எழுப்ப முடிவு செய்தார்.
நசருதீன் கோபத்துடன் எழுந்தார். “எதுக்கு என்ன எழுப்பினே?”
சூரியன் உதயமாகி ரொம்ப நேரம் ஆச்சு. பறவைகள் மரங்களில் பாடிக்கொண்டு இருக்கு. காலை உணவு ஆறிப்போச்சு. அதான் எழுப்பினேன்.”
சாப்பாடு கெடக்கட்டும். நா ஒரு லக்‌ஷம் தங்க காசுக்கு ஒரு காண்ட்ராக்ட் கையெழுத்து போட இருந்தேன். கெடுத்துட்டே!”
கண்களை மூடி திருப்பி கனவு காண முயன்றார்.
காண்ட்ராக்டில் நசருதீன் எதிராளியை ஏமாற்றிக்கொண்டு இருந்தார். அவன் பெரும் கொடூரமானவன்.
திரும்பி கனவு காணும்போது ஏமாற்றுவதை நிறுத்தினால் நசருதீன் புனிதராகி விடுவார்.
கொடுங்கோலன் மக்களை கொடுமை செய்வதை தடுத்தால் அவர் விடுதலை வீரராகிவிடுவார்.
இதன் நடுவில் அவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக்கொண்டு இருந்தால் அவர் ஞானியாகிவிடுவார்.
இன்னும் தூங்கி கனவு கண்டு கொண்டிருந்தால் நீ என்ன புனிதர் அல்லது விடுதலைவீரன்?

No comments: