Pages

Wednesday, November 28, 2018

பறவையின் கீதம் - 73





நெய்ஷாபூரிலிருந்து ஒரு கதை.
காதலன் காதலியின் வீட்டுக்குப்போனான். கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நான்தான்"
இங்கே ரெண்டு பேருக்கு இடமில்ல. போங்க"
காதலனுக்கு ஒன்றும் புரியவில்லை. சில வருடங்கள் அது பற்றி யோசித்தான். பின் ஒரு நாள் சென்று கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நீதான்"
கதவு உடனடியாக திறந்தது.

No comments: