Pages

Wednesday, May 19, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 47




 

541. க₄டோ₁த்₃ப₄வஸுத₃ர்ஶநாய நம꞉    (காலடியில்) கும்பமுனியை தரிசித்தவர்
542. ஸ்வயம்ʼவிநம்ரவ்ருʼக்ஷாக்₃ரஶாகா₂ர்பி₁த₁ப₂லாஶநாய நம꞉    தாமாகவே குனிந்து மரங்களின் நுனிக்கிளைகள் அர்ப்பணித்த பழங்களை உண்டவர்
543. வர்ஷத்₃ப₃லாஹகோ₁ந்முக்₁த₁நீராஸாராத்₄வமத்₄யகா₃ய நம꞉    பொழியும் மேகங்கள் கொட்டும் நீர்ப்பெருக்குடன் (கூடிய) பாதைகளில் (பாதிப்பின்றி) செல்பவர்
544. ஸமுஜ்ஜ்வலத்₃த₃வஜ்வாலாத₃த்₁த₁வீதீ₂வநாஶ்ரயாய நம꞉    கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ (விலகி) அளித்த பாதையால் காட்டை அடைந்தவர்
545. ஶராரும்ருʼக₃நிர்வ்யூட₄ஸரணீயஸ்ருʼதி₁க்₁ரமாய நம꞉    ஹிம்ஸிக்கக்கூடிய மிருகங்கள் (தாமே) விலகியளித்த செல்லவேண்டிய பாதைகளில் ஸஞ்சரித்தவர்
546. ஸதா₃நுகூ₁லப₁வநாய நம꞉    காற்றினால் எப்போதும் அனுகூலம் செய்யப்பட்டவர்
547. வஸிஷ்டா₂ய நம꞉    (நீங்காத) செல்வம் உடையவர்களில் சிறந்தவர்
548. வாக்₃யதா₁ய நம꞉    மௌனமாக இருப்பவர்
549. வராய நம꞉    சிறந்தவர்
550. ஸமீப₄ வத்₁ஸமுத்₁பா₁தா₁ய நம꞉    (செல்லும் பாதையில் அந்தந்த ஊர்மக்களின் வினையால் ஏற்பட்ட) அஶுப அடையாளங்கள் தாமே அடங்கப்பெற்றவர்
551. பா₁ம்ʼஸூந்முக்₁த₁ப₁தா₂ந்த₁ராய நம꞉    தூசிகளற்ற (சுத்தமான) பாதைகளில் சென்றவர்
552. து₁ஷார ஶீக₁ர ஸ்ப்₁ருʼஷ்ட₁ ஶ்லிஷ்ட₁ பி₁ஷ்டா₁த₃ந க்₁ரியாய நம꞉    பனி (அல்லது நதி/மழை நீர்) தெறித்துபட்டதனால் மிருதுவான (சத்து) மாவை (மட்டும்) சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்
553. மக₁ரந்த₃ ஜ₂ரீமாந்ய மது₄ரோக்₁த₁யே நம꞉    மகரந்தத் (தேன்) வழிவது போல் மதிக்கத்தக்க இனிமையான சொற்கள் கொண்டவர்
554. மஹாக₁வயே நம꞉    பெரும் புலவர்
555. க₁மண்ட₃லூ த₃ர கோ₁டீ₃ க்₁ருʼத₁ க₁ல்லோலி நீஜ₂ராய நம꞉    அலைபுரளும் (நர்மதா) நீர்ப்பிரவாஹத்தை கமண்டலுவுக்குள்ளே அடக்கியவர்
556. அம்ருʼஷ்ட₁ ப₄ஸ்மக்₁லிந்நாம்ʼஶுகா₁ந்த₁ நீர ச₁ரஸ்தி₂த₁யே நம꞉    (நீரில் இறங்கியும்) அழியாத திருநீறும் நனைந்த வஸ்த்ரத்தின் நுனிப்பகுதியில் மீன்களும் கூடியவர்
557. வேலாதா₄மவ்யுத₃ஸ்தா₁ப்₃த₄யே நம꞉    எல்லைக் கரையில் ஸமுத்ரத்தை விரட்டியவர் (கதை தேட வேண்டும்)
558. ம்ருʼத₁ஸஞ்ஜீவநேக்ஷணாய நம꞉    இறந்தவர்களை உயிர்ப்பிக்கவல்ல பார்வையை உடையவர் (கோகர்ணத்தில் அவ்வாறு ஆசார்யாள் செய்ததாக சரித்ரம்)
559. மஹாவ்யாதி₄ப்₁ரஶமநாய நம꞉    பெரும் வியாதிகளை குணமாக்குபவர்
560. மத₃க்₄நாய நம꞉    செருக்கை அழிப்பவர்
 

No comments: