Pages

Wednesday, January 28, 2009

தமஸ் என்ன ஆச்சு?



சரி அடுத்து தாமசம் என்கிற தமஸ்.
[மூல புத்தகத்திலே கொஞ்ச தூய தமிழா இருக்கு. ராசதம் ன்னு சொன்னா ராஜசம். மூலத்தை மாத்துக்கூடாது என்கிற கொள்கையாலே அப்படியே போடறேன். குழம்ப வேண்டாம்.]
ஆமாம் தமஸோமா ஜ்யோதிர் கமய ´தமஸ்´ தான்.

இந்த தமோ குணத்திலே பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை இரண்டா பிரியும். ஒண்ணு ஆவரணம். இரண்டாவது விட்சேபம். (விக்ஷேபம்)
ஆவரணம் என்கிறது மறைப்பு. விட்சேபம் என்கிறது பல வகையா தோன்றுகிற விஷயம்.
எந்த சக்தி நாம நம்மை சரியா, உண்மையா பாக்க முடியாம தடுக்கிறதோ அதுதான் ஆவரண சக்தி. இதோட சேட்டையாலதான் நாம ப்ரம்மம்ன்னு தோணாம வேற மாதிரி தோணுது. என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த நினைப்பை நீக்க முடியலியே! அது அவ்வளோ பவர்புல்!
இரண்டாவதான விட்சேபம் சுவாரசியமானது!
இந்த உலகம் மாறிட்டே இருக்கு. ஒரு கணத்திலே இருந்தது அடுத்த கணம் இல்லை. மாலை சூரியன் அஸ்தமிக்கிறப்ப பாருங்க. வண்ணக்கோலங்களை மாறிட்டே இருக்கிறதை!
இன்னிக்கி பாத்த வானம் நாளை அதே போல இல்லை. தாவரம் அதே போல இல்லை.
நாமும் ஒரு செகண்ட் இருக்கிறாப்பல அடுத்த செகண்ட் இல்லை. உடம்பில பல செல்கள் செத்து பலது புதுசா உருவாகிகிட்டு இருக்கு!


இப்படி எல்லாமே புதுசு புதுசா விதவிதமா மாறிகிட்டே இருக்கிறது விட்சேப சக்தியாலதான்.
ரெண்டுமே தாமசத்திலேந்து வந்தாலும் ஆவரணம் பொல்லாது விட்சேபம் நல்லது. ஏன்னு அப்புறம் பாக்கலாம்.


35.
சீவ ஈஸ்வரர்களுக்கு சூட்சும சரீராதி உண்டான முறைமை கூறத்துவங்கி முதலில் சக்திகளின் தோற்றம் சொல்லல்:

ஏமமா யாவினோ தவீசனா ரருளி னாலே
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

PG

ஏம மாயா வினோத ஈசனார் அருளினாலே, பூமலி (பொலிவு மிகுந்த) உயிர்கட்கு எல்லாம் போக சாதனம் (ஆன சூக்கும தேகம்) உண்டாக தாமத குணம் இரண்டு சக்தியாய் பிரிந்து தோன்றும். வீமமா (பயங்கரமான) மூடல் (ஆவரணம்) என்றும் விவிதமாம் தோற்றம் (விட்சேபம்) என்றும்.
தாத்பர்யம்: சித்தின் நிழல்தங்கிய தமோ குணமானது அறிவு விளங்காததாகிய ஆவரண சக்தியாகவும் அறிவு விளங்குவதாகிய விட்சேப சக்தியாகவும் தோன்றியது.



3 comments:

Kavinaya said...

ம்.. புரிஞ்சு போச்சு :) நன்றி.

திவாண்ணா said...

:-)

Geetha Sambasivam said...

விருதுக்கு வாழ்த்துகள்.