Pages

Thursday, January 29, 2009

தன் மாத்திரைகள்




இந்த விட்சேப சக்தியால சீவர்கள் அஞ்ஞானம் ஒழிஞ்சு மோக்ஷம் அடைய எது தேவையோ அதை எல்லாம் பகவான் படைச்சு இருக்கான். இதனால்தான் ஆவரணம் மோசம் விட்சேபம் நல்லதுன்னு சொல்கிறது.

அப்படி என்ன படைச்சு இருக்கு? நம்மோட உடம்பு (சுவரை வெச்சுதானே சித்திரம் எழுத?) அந்தக்கரணங்கள் (இது வழியாதான் மோட்சத்துக்கு வழியை தேடணும்) புவனங்கள் - அதாங்க உலகங்கள் (இல்லாட்டா எங்கே வாழறது?) போகங்கள் (உடல்லே உயிர் தங்கணுமே?)

சரி. இப்ப இதெல்லாம் எப்படி தோன்றியது? இதுக்கு சிலர் வெவ்வேறு விதமா பதில் சொன்னாலும் இப்ப பாக்கிறது பரவலா ஒத்துகிட்டது.

முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான். அதிலேந்து வாயு. வாயுலேந்து அக்னி. அக்னிலேந்து நீர். நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.
இதுக்கெல்லாம் இப்ப பேர் சூக்கும பஞ்ச பூதங்கள் அல்லது தன் மாத்திரைகள்.
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இவை இருக்கும்.
ஆகாசத்திலே வாயு முதலான மத்தது இருக்கும். வாயுவிலே அக்னி முதலா மத்தது ..இப்படியே...
இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அதன் வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன் மாத்திரையோட (18 பிப்ரவரி அன்று திருத்தம்)
அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணங்களும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?

ஆகாசத்தின் குணம் எல்லாத்துக்கும் இடம் தருவது.
வாயுவுக்கு இந்த குணமும் உண்டு. மேலும் அதோட இயற்கையான சலன குணமும் உண்டு.
அக்னிக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல் கூட அதோட குணமான உருவமும் உண்டு.
நீருக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் கூட அதோட குணமான ருசியும் உண்டு.
மண்ணுக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம், ருசி, கூட அதோட குணமான மணம் உண்டு.

இவற்றினால அனுபவிக்கிற சாதனமான தநு - சூட்சும உடல்கள் உண்டாகும்.

36.
விட்சேப சக்தியில் தன் மாத்திரையான சூட்சும பூத உற்பத்தி கூறல்.

தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற்
காற்றதாங் காற்றிற்றீயாங் கனலினீர் நீரின்மண்ணாம்
போற்றுமிவ் வைந்துநொய்ய பூதங்களென்று பேராம்
சாற்றுமற் றிவற்றிற்போக சாதனதநு வுண்டாகும்

[முன்] சொல்லிய தோற்றமாம் சத்திதன்னில் (விட்சேபசக்தியில்) (சத்தத்தின் மாத்திரையான) விண்ணாம்; விண்ணிற் (ஸ்பரிசத்தின் மாத்திரையான) காற்றதாம்; காற்றின் (ரூபத்தின் மாத்திரையான) தீயாம்; கனலின் (ரஸத்தின் மாத்திரையான) நீர்; நீரின் (வாசனையின் மாத்திரையான) மண்ணாம். போற்றும் இவ்வைந்தும் (இந்த 5 தன் மாத்திரைகளும்) நொய்ய (சூட்சுமமான) பூதங்கள் என்று பேராம். சாற்றும் இவற்றில் போக சாதன[மான] தநு (சூட்சும தேகங்கள்) உண்டாகும்.

[விட்சேப சக்தியில் இருந்து பஞ்ச பூதங்களின் தன்மைகள் உண்டாகும்]


3 comments:

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.com/2009/01/blog-post_29.html

போட்டாச்சு, உங்க பதிவுகள் இரண்டு நாளாப் படிக்கலை, படிச்சுட்டு வரேன், மெதுவா!

Kavinaya said...

குழப்பலை :)

திவாண்ணா said...

பிழைச்சேன்!