Pages

Thursday, January 22, 2009

மூல ப்ரக்ருதி




எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி. நினைவு தெரிஞ்சது ஒரு 3-5 வயசுன்னு பாத்தா ஒரு 50 வருஷ உலக வாழ்க்கை நினைவு இருக்கு. யோசிச்சு பாத்தா இந்த 50 வருஷ காலம் ஒண்ணுமே இல்லைன்னு தோணுது. ஆனா இதுக்குள்ளேயே எவ்வளோ விஷயம் மாறிப்போச்சு!

கலி யுகம் தோன்றி 5000 சொச்சம் வருஷம்ன்னா அது ரொம்பவும் ஒண்ணும் இல்லை. என் வாழ்க்கையின் ஒரு 100 மடங்கு. அவ்வ்ளோதான்.

மாறிப்போன உலகத்தை பாக்கலாம். ஒரு வருஷம் முன்னேன்னா நமக்கு நல்லாவே தெரியுது. பத்து வருஷம் முன்னே கூட பரவாயில்லே. நூறு வருஷங்கள் முன்னேன்னா கொஞ்சம் கற்பனை பண்ணிடலாம். ஆயிரம்னா ஹேஷ்யம் இன்னும் அதிகமாகும். பத்தாயிரம்? யார் கண்டா? லக்ஷம்? கற்பனையே முடியாது, இல்லையா? அதுக்கு முன்னாலே இருந்தா என்ன அதுக்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்கள் முன்னாலே இருந்தா என்ன? கற்பனை வர முடியாது. ஒரு அளவு தாண்டினதும் சிலது அர்த்தமில்லாமே போயிடும்.

(கிடைக்கிற சில குறிப்புகளை வெச்சுகிட்டு மனுஷன் இப்படி பண்ணான் அப்படி பண்ணான்னு சொல்லிகிட்டு இதுக்கு அடிதடி சண்டை வேற... பாக்கிறப்ப சிரிப்பா வருது. ஒண்ணு புராணங்களை நம்பலாம். இல்லைனா நமக்கு தெரியாதுன்னு ஒத்துக்கலாம். இப்படி இருக்க சாத்தியக்கூறு அதிகம்ன்னுதான் ஒரு ஆராய்ச்சியாளரால சொல்ல முடியும். கொஞ்ச நாள்ளே அதுவே உண்மைன்னு ஆயிடுது. :-) பொன்னியின் செல்வன் கதையை வெச்சுகிட்டு அது உண்மைன்னே நினைச்சு சண்டை போடறவங்களை பாத்து இருக்கேன். கிடக்கட்டும்!)

சீவர்கள் எல்லாமே எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரியாத அளவு காலத்திலே நமக்கு முன்னாலே உதிச்சவங்க.

நடுவிலே ஒரு நிலையை எடுத்துப்போம்.

எல்லாமே ஒரே குழம்பு போல – மேட்டர் எனர்ஜி காம்ப்லெக்ஸ் (matter energy complex)- லயமாகி இருந்தது. இதுக்கு மூல ப்ரக்ருதி ன்னு பேர். சீவர்கள் எல்லாம் இதிலே அடங்கி இருக்கும். சீவர்கள் ன்னு எப்படி தனியா சொல்ல முடியுது? அந்த சீவர்களோட கர்மா அவற்றோட ஒட்டி இருக்கும். அதனால தனியா தெரியுது. இந்த கர்மா ஒட்டி இருக்கிறதாலேதான் பிறவின்னு ஒண்ணு வருது.
கார்மாவால பிறவி எடுத்து அப்புறம் கர்மா தீராம, புதுசா கர்மா சேத்துகிட்டு, திருப்பி திருப்பி பிறவி எடுத்து.... பல ஆயிர வருஷங்கள் போய் எல்லா சீவர்களும் திருப்பியும் மூலப்ப்ரக்ருதியிலே லயமாகும். திருப்பி உதிக்கும். இன்னொரு கால கட்டத்திலே சீவர்கள் எல்லாமே தனியாக இல்லாமலே லயமாயிடும். இதோட விவரணம் அப்புறமா பாக்கலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மூல ப்ரக்ருதியிலேந்து ஒரு கால கட்டத்திலே ஈஸ்வரனோட உள் நோக்கிய பார்வையாலே இவை மூன்று குணங்களா தனியா வெளிப்படும்.

இந்த 3 குணங்களைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கிறோம். சத்வம் , ரஜஸ், தமஸ். இதை வெளுப்பு, சிவப்பு, கருப்புன்னு உருவகப்படுத்தி இருக்காங்க. சும்மா பாகுபடுத்தத்தான்! வேற விதமா சுத்தம், அழுக்கு, இருட்டு என்கிறார்கள்.

எல்லாருக்கும் இந்த 3 குணங்களும் உண்டு. என்ன, ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைவா இருக்கும். அவ்வளவுதான்.

29.
அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே

அதுதான் (அக்கற்பனை) எப்படி [உண்டாயிற்று] என்றக்கால் (என கேட்பாயானால்) அநாதியாஞ் (ஆதியில்லாத)  சீவர் எல்லாம் பொதுவான  சுழுத்தி [அவஸ்தை] போல அவ்வியந்தன்னில்  (மூலப்பிரகிருதியில்) பொருந்தும் (கருமவாசனையுடன்அடங்கியிருக்கும்).  இது காலதத்துவப் பேர் [அடைந்து] ஈசன் உட்பார்வையாலே முது மூல (முன்னுள்ள பிரகிருதி) சுபாவம் விட்டு (தன்மை
விட்டு) முக்குணம் வியத்தமாமே. (முக்குணங்களாய் வெளிப்படும்)

30.
அந்த முக்குணங்களின் பெயர் முதலியன:
உத்தம வெளுப்புச் செம்மை  யுரைத்திடு கறுப்பு மாகும்
சத்துவ குணத்தி னோடு ரசோகுணந் தமோகு ணந்தான்
சுத்தமோ  டழுக் கிருட்டாச் சொல்லுமுக் குணமு மூன்றாய்
ஒத்துள வேனுந் தம்மு ளொருகுண மதிகமாமே

உத்தம (முதலாவதாக) வெளுப்பு, செம்மை,  [அதமமாக] உரைத்திடும் கறுப்பும் ஆகும். [முறையே] சத்துவ குணத்தினோடு, ரசோகுணம், தமோ குணந்தான் [அவற்றின் பெயர்]. சுத்தமோடும், அழுக்கு (உடனும்), இருட்டாக[வும்] சொல்லும் [இந்த] முக் குணமும் மூன்றாகி ஒத்துளவேனும் (ஒத்து இருப்பினும்) தம்முள் (அவற்றுள்) ஒரு குணம் அதிகமாமே. (மேலானது)


10 comments:

Geetha Sambasivam said...

எட்டு கழுதை வயசு?? ஏதோ உ.கு.??????

போகட்டும், இந்த முக்குணங்கள் பத்தித் தான் இன்னிக்கு எங்கே போனாலும். நம்ம முக்கிய நதிகள் மூன்றும் கூட இதே மாதிரி முக்குணங்கள் கொண்டதுனு படிச்சேன், வெண்மையான சரஸ்வதியும், சிவந்த கங்கையும், கறுப்பான யமுனையும் ஒண்ணோடொண்ணு கலக்கறாப்பலனு! அதான் நினைவில் வந்தது.

Geetha Sambasivam said...

இன்னிக்கு வேளுக்குடி சொன்னது நாம எல்லாருமே தங்க நூலில் கட்டிய நவரத்தினங்கள் போலன்னு. தங்க நூலாகிய பகவானின் ஆதாரம் இல்லைனா, நாம் எல்லாம் சிதறிப் போயிடுவோம் இல்லையா? அவனே ஆதாரம்னு சொன்னார், தங்க நூல் எவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கோ அப்படி பகவானும் கண்ணில் புலப்படாமல் இருக்கான் என்றார். அதுவும் நினைவில் வருது! நன்றி.

திவாண்ணா said...

ஒரு உ.கு வும் இல்லை! நதிகள் உதாரணம் நல்லா இருக்கு! வேளுக்குடியார் சொன்னதும் இப்ப நினைவு வருது. நன்னி!

sury siva said...

// எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி. //


ஒரு கழுதை வயசுன்னா எத்தனை என்று என் இல்லக்கிழ்வியிடம் கேட்டேன்.
உங்களைவிட ஒரு அஞ்சு வயசு சின்னது என்றாள்.

எனக்கு 67 வயது. 67 மைனஸ் அஞ்சு 62.
62 இன்டு எட்டு இஸ் 496
496 மைனஸ் இரண்டு 494.
அப்ப உங்க வயசு 494 ஆ ! அப்பாவ் !!


சுப்பு ர‌த்தின‌ம்.

sury siva said...

இத‌ற்கு முன் நான் இட்ட‌ முன்னோட்ட‌த்திற்கு ஒரு க‌ரெக்ஷ‌ன்.

ஒரு க‌ழுதையின் ச‌ராச‌ரி வ‌ய‌து 28 ஆம். ஆனாலும், க‌ழுதை ஸான்க்சுவ‌ரி
உரிமையாள‌ர்க‌ள் ச‌ராச‌ரி வ‌ய‌தினை 38 என்கிறார்க‌ள். அதிக‌ ப‌ட்ச‌மாக‌
ஒரு க‌ழுதை 54 வ‌ய‌து வ‌ரை உயிர் வாழ‌லாம் என்கிறார்க‌ள்.
// The average lifespan for a donkey is about 28 years; Donkey Sanctuary residents have an average age of 38; the oldest is 54.//
Courtesy: wikipedia.


என்ன‌து நீ த‌ப்பா சொல்லிட்ட‌யே ! நானும் நீ சொன்ன‌தை வ‌ச்சு
நானும் தப்பா க‌ண‌க்குப்போட்டு விட்டேனே என்றேன் என் ம‌னைவியிட‌ம்.

அந்த‌க்க‌ண‌க்கெல்லாம் வெஸ்ட‌ர்ன் க‌ழுதைக‌ள் வ‌ய‌சு. நான் சொன்ன‌து எல்லாம்
உங்க‌ வீட்டுக் க‌ழுதைக‌ள் வ‌ய‌சு என்றாள்.

சுப்பு ர‌த்தின‌ம்.

Kavinaya said...

//நாம எல்லாருமே தங்க நூலில் கட்டிய நவரத்தினங்கள் போலன்னு//

ஹை. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :)

திவாண்ணா said...

வணக்கம் சூரிசார்!
நான் எங்க ஊரு கழுதை போல இருக்கு!

சின்ன வயசிலே கழுதைக்கு 7 வயசுன்னு கேள்விபட்டதுண்டு. அப்படி திட்டவும் திட்டுவாங்க. அந்த நினைவிலே எழுதினேன். இப்ப கணக்கு போட்டுக்கலாம்! :-))

@கவி நயா
:-))

Geetha Sambasivam said...

//எனக்கு 67 வயது. 67 மைனஸ் அஞ்சு 62.
62 இன்டு எட்டு இஸ் 496
496 மைனஸ் இரண்டு 494.
அப்ப உங்க வயசு 494 ஆ ! அப்பாவ்//

ரெங்க திவாத் தாத்தா, ஜாலியா இருக்கு, சூரி சார் ரொம்ப தாங்ஸ்!

திவாண்ணா said...

@ கீதா அக்கா from திவா தாத்தா
கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்!

திவாண்ணா said...

#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 28
இப்படிப் போல நாம ரூபங்க ளிரண்டு மின்றி
யொப்பமா யிரண்டற் றொன்றா யுணர்வொளி நிறைவாய் நிற்கு
மப்பிரமத்திற் றோன்று மைம்பூத விகார மெல்லாஞ்
செப்புகற் பனையினாலே செனித்தவென்றறிந்து கொள்ளே.

இப்படிப் போல நாம ரூபங்கள் இரண்டும் இன்றி ஒப்பமாய் இரண்டு அற்று ஒன்றாய் உணர்வு ஒளி நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாஞ்
செப்பு கற்பனையினாலே செனித்த(ன) என்று அறிந்து கொள்ளே.

இல்லாத பாம்பை கயிற்றின் மீது ஏற்றிப் பார்த்தது போலத்தான் நாமும் செய்கிறோம். பிரம்மம் பேரோ உருவமோ இல்லாதது; சௌகரியத்துக்காக நாமதான் ஒரு பேர் கொடுத்து இருக்கோம். அது ஒண்ணாத்தான் இருக்கு. அதுக்கு இரண்டாவதா எதுவுமே இல்லை. அது உணர்வாலும் ஒளியாலும் பூரணமா இருக்கு. பின்ன பஞ்ச பூதங்கள் உருவாச்சாக்கும்; அதுலேந்து இது வந்ததுன்னு இதுலேந்து அதுன்னு எல்லாம் சொல்றாங்களேன்னா, அது நம்மோட கற்பனையால வந்தவைதான். கயிறு பாம்பானா மாதிரி.