Pages

Thursday, October 8, 2009

விட்ட குறை தொட்ட குறை ...



156.
இப்புவி யிலிஞ்ஞான பூமியொன்றி லிரண்டிலடைந் திருந்தா ரானால்
அப்புருடர் மிலேச்சரா கிலுமுத்தர் குருபாதத் தாணை மெய்யே
தப்புரை யென் றவர்கெடுவார் நடுவான மறைகளைநீ சங்கி யாதே
செப்புமொழி வழிதிடமா யகம்பிரம மென்றிருந்து தெளிந்தி டாயே

இப்புவியில் ஞான பூமி ஒன்றில் இரண்டில் அடைந்திருந்தார் ஆனால் அப்புருடர் மிலேச்சர் ஆகிலும் முத்தர் குரு பாதத்தாணை மெய்யே! தப்பு உரை என்றவர் கெடுவார் நடுவான மறைகளை நீ சங்கியாதே. செப்பு மொழி வழி திடமாய் அகம் பிரமம் என்றிருந்து தெளிந்திடாயே.
--
யாரேனும் இந்த ஞான பூமிகள் ஒன்று (சுபேச்சை) அல்லது இரண்டில் (விசாரணை) அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக காலப்போக்கிலே ஆவார்கள். சற்குரு பாதங்கள் மீது ஆணையாக இது சத்தியமே. இது தவறு என்பவர்கள் நாசமடைவார்கள். பாரபட்சமற்ற சுருதி வாக்கியங்களில் நீ சந்தேகம் கொள்ளாதே! அவற்றில் உறுதி உடையவனாக அகம் பிரம்மம் என்று அநுசந்தானம் செய்து பிரம்மமாகவே இருப்பாயாக.

ரொம்ப பலமாவே சொல்கிறார். முன்னே நல்ல குடியில் பிறந்துன்னு சொன்னப்ப சந்தேகம் வந்தவங்களுக்கு இப்ப தெளிவா இருக்கணும்.


No comments: