Pages

Tuesday, October 13, 2009

எதில எப்படி...



160.
மந்த வைராக்கியத்தில் சன்னியாசம் இல்லை. தீவிரத்தில் இரண்டு உண்டு.

பாவிமந்த விராகத்திற் சந்நியா சங்களொன்றும் பலித்திடாதே
தீவிரத்திற்கு டீசகமும் வெகூதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம்
தாவிநடந் திடத்திடமி லாதவர்களுக்குக் குடீசகமுஞ் சகங்களெங்கும்
மேவிநடந் திடத்திடமுள் ளவர்க்குவெகூ தகமுமென விதித்தார் மேலோர்.

பாவியின் மந்த விராகத்தில் சந்நியாசங்கள் ஒன்றும் பலித்திடாதே. [மீண்டும் இச்சை உண்டாகி பற்றுதல் ஏற்பட்டால் இம்மையில் இகழ்ச்சியும், மறுமையில் நரகமும் விளயும். ஆதலால் சன்னியாசம் கிடையாது) தீவிரத்தில் குடீசகமும் பகூதகமும் என்று இரண்டு திறங்கள் (சன்னியாசங்கள்) உண்டாம். தாவி நடந்திட (ரோகம் அல்லது வயோதிகத்தால்) திடமில்லாதவர்களுக்குக் குடீசகமும் (இவர்களுக்கு சஞ்சாரம் தவத்துக்கு விக்கினமாகும். ஆகையால் காமம் முதலான பிரவிருத்திக்கு ஹேது இல்லாத ஓர் இடத்தில் தவம் செய்தல் நன்று.) சகங்கள் எங்கும் மேவி நடந்திட திடமுள்ளவர்க்கு (சஞ்சரிக்காவிடில் ஆத்ம விசாரம் இல்லாது போனால் காமாதி பிரவிருத்தி உண்டாகிவிடும்) பகூதகமும் என விதித்தார் மேலோர்.
மந்த வைராக்கியம் இருக்கிறவருக்கு சன்னியாசம் சித்திக்காது. திருப்பி குடும்பியா ஆகிறவனை பாத்து ஜனங்கள் சிரிப்பாங்க திட்டுவாங்க. இந்த பிறவி முடிகிறப்ப அடுத்து நரகம்தான். அப்படி அது மகா பாபம்.
தீவிர வைராக்கியத்தில...
பற்றின்மையை வளத்துக்காட்டாலும் அப்படியே வைச்சுக்கிறது முக்கியம். மழைக்காலம் தவிர ஒரு இடத்தில மூணு நாளுக்கு மேல தங்கக்கூடாதுன்னு விதி. அப்படி தங்கினா அங்கே இருக்கிறவங்க மேலே பற்றுதல் வர அதிக வாய்ப்பு இருக்கு.
அதனால யாருக்கு இடம் இடமா நகர உடம்பில தெம்பு இருக்கோ அவங்க நகந்துகிட்டே இருக்கணும். இவர் பகூதகர்.
ஒத்தருக்கு உடம்பில தெம்பு இல்லை. அவரைப்போய் நகந்துகிட்டே இருன்னா அவர் கஷ்டப்படுவார். அந்த நிலைல ஆத்ம விசாரம் எங்க செய்யறது? அதனால சௌகரியமான ஒரு இடத்தில தனிமையில தங்கி தபஸ் பண்ணலாம். இவர் குடீசகர். ஹும். அப்படி யாரும் உக்காந்தா மக்கள் அவரை தனிமையில விடுவாங்க என்கறீங்க? வயதான சிலர் குடும்பத்திலேயே இருந்து கொண்டு பூஜை, ஜபம்ன்னு இருக்கிறதை பாத்து இருக்கேன். குடும்பம் என்கிறதால அவரை கவனிச்சுக்கவும் செய்கிறாங்க. தொந்திரவும் செய்கிறதில்லை. அப்படிப்பட்ட குடும்பம் அமையனுமே.


2 comments:

yrskbalu said...

குடும்பம் என்கிறதால அவரை கவனிச்சுக்கவும் செய்கிறாங்க. தொந்திரவும் செய்கிறதில்லை. அப்படிப்பட்ட குடும்பம் அமையனுமே.

yes. we have to pray god for this.

திவாண்ணா said...

பாலு சார். உண்மைதான்!