Pages

Wednesday, May 2, 2018

கிறுக்கல்கள் - 197





குழந்தைகளை ஒழுக்கத்தோட வளர்க்கிறது பத்தி மாஸ்டர் இதை சொன்னார்:

நான் பதின்ம வயசு பையனா இருந்தப்ப என் அப்பா என்னை கூப்பிட்டு நகரத்தில் சில இடங்களைப்பத்தி எச்சரிக்கை செஞ்சார்.
"மகனே இரவு விடுதிக்கு போகாதே!”
"ஏன்பா?”
"அங்கே போனா நீ பார்க்கக்கூடாததை எல்லாம் பார்க்க நேரும்!”
இது இயற்கையா என்னை உசுப்பி விட்டது, கிடைச்ச முதல் வாய்ப்பில இரவு விடுதிக்குப்போனேன்!
சீடர்கள் கேட்டார்கள்: “ அங்கே பார்க்கக்கூடாததை எல்லாம் பாத்தீங்களா மாஸ்டர்?”
மாஸ்டர் சொன்னார்: "ஆமாம்.அங்கே என் அப்பாவை பாத்தேன்!”

No comments: