Pages

Friday, May 4, 2018

கிறுக்கல்கள் - 199





ஒரு பெண் சீடர் மாஸ்டரிடம் வந்தார். தான் உலக விஷயங்களில மிகவும் அமுங்கி சுய நலத்தோட ஆன்மீக முன்னேற்றமே இல்லாம இருப்பதாக உணர்ந்தார். ஆனால் ஒரு வாரம் மடாலயத்தில் தங்கின பிறகு மாஸ்டர் அவரிடம் "நீ இப்ப நல்லா இருக்கே. ஆன்மீக நாட்டம் இருக்கு" என்றார்.

ஆனா, நான் மத்த சீடர்கள் போல ஆன்மீக வழியில இல்லையே? அதுக்கு என்ன செய்யலாம்
 
மாஸ்டர் சொன்னார் " இத கேளு. ஒரு ஆசாமி புதுசா ஒரு கார் வாங்கினார்.ஆறு மாசம் ஓட்டிவிட்டு கணக்கு போட்டு அது மைலேஜ் நல்லா கொடுக்கலைன்னு முடிவுக்கு வந்தார். காரை வொர்க்‌ஷாப்புக்கு கொண்டு போனார். அங்கே மெகானிக் நல்லா சோதிச்சு பாத்துட்டு "கார் நல்ல கண்டிஷன்ல இருக்கு" ன்னு சொன்னார். இவர் கேட்டார்: பின்ன மைலேஜ் கிடைக்கலையே? மத்தவங்க சொல்ற மாதிரி மைலேஜ் கிடைக்க நான் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையா?"

, இருக்கே? மத்தவங்க மாதிரி நீங்களும் செய்யலாமே?

என்ன அது?

மைலேஜ் பத்தி பொய் சொல்லறது!

No comments: