Pages

Tuesday, May 15, 2018

கிறுக்கல்கள் - 205





மாஸ்டர் சொன்னார்:
உன் தாயின் கர்ப்பத்தில நீ மௌனமாக இருந்தாய். பிறந்த பின் பேச ஆரம்பித்தாய். பேசி பேசி பேசி … ஒரு நாள் உன்னை புதைத்து விடுவார்கள். அப்போது மீண்டும் மௌனமாய் இருப்பாய்.
இந்த மௌனத்தை பிடித்துக்கொள். அது ஆரம்பத்திலும் இருந்தது, கடைசியிலும் இருக்கும். இப்போது இந்த வாழ்க்கை என்னும் சத்தத்தின் நடுவேயும் இருக்கிறது. அதை கண்டு பிடித்து அனுபவி. இந்த மௌனமே உன் ஆழ்ந்த தனித்துவம்!

No comments: