Pages

Monday, May 7, 2018

கிறுக்கல்கள் -200





ஒருவர் மாஸ்டரை கேட்டார்: உங்கள் சீடர்களுக்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?
மாஸ்டர் சொன்னார். "ஒரு சிற்பி என்ன செய்வானோ அதைத்தான் செய்கிறேன். புலியின் சிலையை வடிவமைக்க சிற்பி ஒரு பெரிய கல்லை எடுத்து புலி போல இல்லாததை வெட்டி அப்புறப்படுத்துகிறார்.”

அவருடைய சீடர்கள் அப்புறமாக விளக்கம் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: “என் வேலை நீ அல்லாத எல்லாவற்றையும் உன்னிடமிருந்து உடைத்து எறிவது. உன் கடந்த காலம், கலாசாரத்தில் இருந்து உன்னுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள், மனப்பாங்கு, கட்டாயங்களை உடைத்து எறிவது. “

No comments: