Pages

Wednesday, May 16, 2018

கிறுக்கல்கள் - 206





"என்ன மனுஷன் இவன்" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. "இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு? மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லிக்கிட்டு இருக்கார்!

ஒரு பெண் சீடர் புன்னகைத்தார்.  

என்னிடம் ஒரு சமையல்காரி இருந்தார். பிரமாதமாக அவியல் செய்வார். ஒரு நாள் "இதை எப்படி செய்கிறாய்?” என்று கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே! ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா? அதான் விஷயமே!

No comments: