Pages

Friday, May 25, 2018

பறவையின் கீதம் - 4





நசருதீன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு போனார். கழுதை முதுகில் ஒரு உப்பு மூட்டையை ஏற்றி இருந்தார். வழியில் ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் மூட்டை நனைந்து உப்பு கரைந்து விட்டது. கழுதைக்கு ஒரே சந்தோஷம். துள்ளிக்குதித்தது; வட்டங்களில் ஓடியது.
நசருதீன் கடுப்பாகிவிட்டார். அடுத்த நாள் பஞ்சு மூட்டையை ஏற்றினார். கழுதை வேண்டுமென்றே தண்ணிரில் நனைந்தது. நீர் ஊறி சுமை அதிகமாகி விட்டது. சந்தோஷமாக கழுதையிடம் நசருதீன் சொன்னார்: "ம்ம்ம்ம் அது! ஒவ்வொரு முறையும் நீரில் நனைந்தால் சுமை குறையும் என்று நினைக்காதே!”

இரண்டு பேர் புதிய மதம் ஒன்றில் இணைந்தார்கள். ஒருவர் கரையேறிவிட்டார். மற்றவர் அமிழ்ந்து போனார்.

No comments: