Pages

Thursday, November 7, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 18





15 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ கங்காதரேந்த்ர ஸரஸ்வதி.
அடை மொழி: கிஷ்பதி கங்காதரர்
பூர்வாஶ்ரம பெயர்: சுபத்ரா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பத்ரகிரி
சன்னியாசம் கொண்டது: 12 வயதில்
பீடாதிபதியாக வருடங்கள்: 12
சித்தி: 3429 சர்வாத்ரி சைத்ர சுக்ல ப்ரதமை (பொது ஆண்டு 0329- பிப்ரவரி- 29) 24 ஆவது வயதில்

அவரது உயர்ந்த புலமை, அறிவு மற்றும் உரையாற்றும் திறமை காரணமாக, இந்த ஆச்சார்யரின் கிஷ்பதி என அறியப்பட்டார். (கிர் = பேச்சு, பதி = தலைவன்).
இந்த ஆச்சார்யரின் சன்னியாசம் எடுத்துக் கொண்டவுடன், அவரது குரு ஒரு உக்கிர பைரவரின் உக்கிரத்தை தணிக்க அகஸ்த்யாசலத்துக்கு (கொடகு) புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கேயே சித்தியை அடைந்தார். இதை அறியாத (அவரது குரு சித்தி அடைந்தார் என்று) ஶ்ரீ கங்காதரர் அவரது குருவை தேடி அகஸ்த்யாசலம் சென்றார். அவரது குரு-பக்தியினால் மகிழ்ச்சி அடைந்த (இன்னும் அந்த பகுதிகளில் சிரஞ்சீவியாக வசிக்கும்) அகத்திய முனிவர் ஒரு வயோதிக பிராமணரின் வடிவத்தில் அவரிடம் வந்து, குரு சித்தி அடைந்ததை அவருக்கு தெரிவித்து, அவருக்கு ஶ்ரீ வித்யா உபதேசத்தையும் அளித்தார். (அவரது குருவிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை).
காஞ்சியில் உள்ள ஶ்ரீமடத்துக்கு திரும்பிய இந்த ஆச்சார்யரின் ஶ்ரீவித்யா மற்றும் சந்திரமௌலீஸ்வரரின் யோக லிங்க பூஜைகளுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்தார். இதன் மூலம் அவர் அனைத்து அறியாமையையும் அழித்து, பிரம்ம ஞானத்தை அடைந்தார்.


No comments: