Pages

Tuesday, November 12, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 22





19 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ வித்யாஞானேந்த்ர ஸரஸ்வதி (2)
பூர்வாஶ்ரமபெயர்: ஶ்ரீகாந்தா
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: உமேஷ ஶங்கரர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 13
சித்தி: 3498 ஹேமலம்பி ஆஸ்வயுஜ்ய சுக்ல நவமி (கிபி 0397-செப்-18)
மற்றவை:
அவரது பூர்வாஶ்ரமத்தில், இந்த ஆச்சார்யர் 'ஸ்வித்ரா' என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டார். இதுபோன்ற நோய்கள் முந்தைய பாப கர்மங்களுடைய விளைவுகளாகும். எனவே, எட்டு வயதிலிருந்து தொடங்கி, (அனேகமாக அவரது உபநயனம் முடிந்தபிறகு) சூர்யனுக்கு தினசரி ஆயிரத்து எட்டு நமஸ்காரங்கள் செய்தார். ஷோடசி மஹாமந்திரத்தையும் தொடர்ச்சியாக ஜபம் செய்தார். சூர்யனுக்கு காட்டிய இந்த பக்தி காரணமாக சூர்யதாசா என்று அழைக்கப்பட்டார். அவரது தபங்கள் அவர் நோயை மட்டும் குணமாக்கவில்லை; அவர் பெரிய ஆன்மீக முதிர்ச்சி பெற்று, மோட்சத்தை அடைய விரும்பினார்.
அவர் பதினெட்டு வயதில் சன்னியாசத்தை எடுத்துக்கொண்டு மவுன வ்ரதத்துடன் பெரிய தபங்களை செய்தார். அவர் தனது பிராணனைக் கட்டுப்படுத்தி, தன் மரணத்தின் காலத்தை நிர்ணயிக்க முடிந்த ஒருவராக ஆனார்.

No comments: