Pages

Wednesday, November 13, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 23





20 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரேந்த்ர ஸரஸ்வதி (3)
அடைமொழி: மூக ஶங்கரர்
பூர்வாஶ்ரம பெற்றோர்: ஆட்டவீரர், ஒரு கணித மேதை; அவருடைய தர்ம பத்னி வித்யாவதி.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 39
சித்தி: 3537 தாது ஶ்ராவண பூர்ணிமா (கிபி 0436-ஜூலை 14)
சித்தியான இடம்: கோதாவரி கரையோரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
மற்றவை:
பிறப்பில் அவர் ஊமையாக இருந்தார், 19 ஆம் ஆச்சார்யர் ஶ்ரீ மார்தாண்ட வித்யகணேந்திர ஸரஸ்வதியின் அனுகிரஹத்தினால் பேசச்சு கிடைத்தது. பின்னர் அவர் அதே குருவிடம் ஆஶ்ரமத்தை ஏற்றுக் கொண்டார், மேலும் அடுத்த பீடாதிபதி ஆனார். பின்னர் அவரே மெண்டகா என்பவருக்கு ஒரு கவிஞனாக கவிதையை எழுதுவதற்கான சக்தியை கொடுத்தார். இந்த கவிஞரும் மேலும் இன்னொரு கவிஞரான ராமில்லாவும் தமது பல பாடல்களில் அவரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் வரலாற்று ரீதியாக உஜ்ஜைன் மன்னர் ஹர்ஷ விக்ரமாதித்யாவுடனும், காஷ்மீர் பிரவரசேனனுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
மூக பஞ்சஶதி இந்த ஆச்சார்யருடையதாக சொல்லப்படுகிறது.

No comments: