Pages

Wednesday, November 27, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 35





32 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சிதாநந்தகணேந்த்ர ஸரஸ்வதி
பூர்வாஶ்ரம பெயர்: பத்மநாபன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: அன்னு ஶங்கரா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 4
சித்தி: 3772 பிரஜோபத்தி மார்க்கசீஷ சுக்ல ஷஷ்டி (பொது ஆண்டு 0671- நவ -16)
பிற:
இந்த ஆச்சார்யர் லம்பிக யோகா என்னும் உயர்ந்த யோகத்தை கடைபிடித்தார். உணவுக்காக உலர்ந்த இலைகளைமட்டுமே அவர் பயன்படுத்தினார்.
(முந்தைய ஆச்சார்யருடன் அவர் நீண்ட காலம் கூட இருந்தார். தன் ஆச்சார்யரின் சித்திக்கு பிறகு மிக விரைவில் (அதாவது 4 வருடங்கள் கழித்து) இந்த ஆச்சார்யரும் அவரது உடல் வடிவத்தை விட்டு விட்டார் என்று தெரிகிறது.
முந்தைய ஆச்சார்யர் ஶ்ரீ ப்ரம்மானந்த கணேந்த்ர சரஸ்வதியின் காலத்தில், லலிதாதித்யா என்ற பெயரில் ஒரு காஷ்மீர அரசர் தென்னிந்திய பகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருந்த போது, முந்தைய ஆச்சார்யரின் சீடராக தன்னை ஒப்புக் கொண்டார்.
முந்தைய ஆச்சார்யரின் சித்திக்கு பிறகு, இந்த ஆச்சார்யர் ராஜாவிடம் காஷ்மீரில் ஒரு அன்னதான சாலையை தனது குருவின் பூர்வாஶ்ரம பெயரான ஜேஷ்டருத்ரர் என்னும் பெயரில் உருவாக்கினார் [இது ஶ்ரீநகரில் கோபாத்ரி அல்லது ஶங்கராச்சாரிய மலை மீது "ஜேஷ்டேஸ்வரர்" என்ற சிவன் கோவில் பெயருடன் ஒத்திருக்கிறது - ஏதோ வரலாற்று தொடர்பு இருக்கலாம்.)
அந்த நாளில் அந்த அன்னதான சாலை மிகவும் பிரபலமாக இருந்ததாம். ஒரு நாளில் ஆயிரம் முறை அரிசி சமைத்து ஒரு லட்சம் மக்களுக்கு உணவு கொடுத்ததாக புகழப்படுகிறது. (ஏதேனும் ஒரு பெரும் விழாக்காலத்தில் நடந்திருக்கலாம்.)
அதேபோல், லலிதாதித்யா இந்தியாவின் தென் பகுதிகளை வென்றபோது கர்நாடகத்தின் ராணி (ஒருவேளை மன்னர் ஏற்கெனவே காலமாகி விட்டார் போலும்) காலமாகிவிட்டார். அவரது மகன் இளம் வயது; மேலும் அனுபவமற்று இருந்தார். இந்த ஆச்சார்யர் சிறுவன் மீது கருணையுடன், கர்நாடகத்தின் சிம்மாசனத்தில் சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் பொருத்தமான மக்களுடன் சிறுவனை அரியணையில் வைக்கும்படி லலிதாதித்யருக்கு அறிவுறுத்தினார்.

No comments: