Pages

Friday, November 29, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 37





34 வது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (2)
பிறப்பிடம்: வேகவதி ஆற்றின் கரையோரம் (காஞ்சிபுரத்திற்கு அருகில்)
பூர்வாஶ்ரம பெயர்: ஶம்பு
பூர்வாஶ்ரம தந்தை: மஹாதேவா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 18
சித்தி: 3810 சௌம்ய மார்க்கஶிர அமாவாஸை (பொது ஆண்டு 0709-டிசம்பர்)-10)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சேதுவிலிருந்து ஹிமாசலம் வரை நீண்ட யாத்திரைகளை மேற்கொண்டார். காஷ்மீர் பகுதியில் இருந்த வேத மரபுகளுக்கு இடையூறு விளைவித்த சகுணா என்ற ஒரு நாஸ்திக ஜைனனைக் கட்டுப்படுத்தினார். இந்த ஆச்சார்யர் தான் அடைக்கலம் அளித்தவர்கள் அனைவரின் துன்பத்தையும் அழித்துவிடுபவராக இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு குழந்தை பெரும் தீயில் சிக்கியது, தன் யோக சக்தியின் மூலம் ஆச்சார்யர் தீக்குள் புகுந்து குழந்தையை தீங்கு இல்லாமல் மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

No comments: