Pages

Thursday, November 28, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 36





33 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சிதாநந்தகணேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: பாஷா பரமேஷ்டி
பிறந்த இடம்: திரிலிங்க தெலுங்கு) தேசம், சந்திரபாகாவின் (அதாவது பீமா ஆற்றின்) கரையில்
குறிப்பு: இன்று ஆந்திர-கர்நாடகா எல்லைக்கு அருகே கர்நாடகாவின் கிருஷ்ணாவுடன் பீமா இணைகிறது. இந்த ஆச்சார்யரின் சமயத்தில் குறைந்த பட்சம் தெலுங்கு தேசத்தின் பகுதியாக அது கருதப்பட்டது.
பூர்வாஶ்ரம பெயர்: திம்மன்னா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ப்ரௌட ராமன்னா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 20
சித்தி: 3792 கர பத்ரபாத கிருஷ்ண ஷஷ்டி (பொது ஆண்டு 0691-Aug-23)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் 15 மொழிகளில் நிபுணர் ஆவார்! அதனால் பாஷா பரமேஷ்டி என்று பெயர். இதனால் அவர் தம்முடைய பக்தர்களிடம் நேரடியாக பேசுவும், அவர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆறுதலையும் வழங்கவும் இயன்றது.
16 வது ஆச்சார்யர் ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரர் காஷ்மீரில் சித்தியை அடைந்ததிலிருந்து, அனைத்து ஆச்சார்யர்களும் பெரும்பாலும் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ஆச்சார்யரே காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ மடத்தில் தங்கி காமாக்‌ஷிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் இந்த ஆச்சார்யரின் காலத்தில் மடம் அதிக கவனம் பெற்று பழுது பார்த்தல் மற்றும் முன்னேற்றங்கள் ஆகியன நடந்தேறின.
(படத்தில் எண் தப்பாக இருக்கிறது. குழம்ப வேண்டாம்!)


No comments: