Pages

Tuesday, March 17, 2009

மேலும் ஆவரணம் பற்றி




52.
இப்ப மேட்டருக்கு வரார் குரு.

அப்பனே உருண்டு திரண்டு இருக்கிறது தெரியுது ஆனா தேங்கா நாரால பண்ண கயிறா இல்லை, உயிர் இருக்கற பாம்பான்னு தெரியாதது போல ¨நான் இருக்கேன்¨ ன்னு தெரியும். அது எல்லாருக்குமே சர்வ சாதாரணமா தெரியும். ஆனா அந்த நான் யார்? தான் பிரம்மம் என்கிறது தெரியாம தன்னை வேறயா - சீவன் ன்னு நினைச்சுக்கிறது ஆவரணத்தாலே என்கிறார்!

ஆதார அதிட்டானத்தில் ஆவரண சக்தி ஆதாரத்தை தெரிய ஒட்டாது மறைக்குமே தவிர ஆதாரத்தையே மறைக்காது என திருஷ்டாந்தம் மூலம் தெரிவித்தல்:

சகமதி லிதுவென் சுட்டாஞ் சமானந்தான் மறைந்தி டாது
மிகவிது கயிறா மென்னும் விசேடந்தான் மறைந்து போகும்
அகமெனுஞ் சமானந் தன்னை யஞ்ஞான மறைத்திடாது
பகர்விசே டமதாஞ் சீவன் பரமெனு மதனை மூடும்.

சகமதில் (உலகில்) இதுவென்று சுட்டால் ( [இருட்டில் கயிறை பாம்பு என] காட்டும்போது) சமானந்தான் மறைந்திடாது (சாமானிய ரூபம் இல்லாது போகாது). இது கயிறாம் என்னும் விசேடந்தான் (விசேட ரூபமே) மறைந்து போகும். அகம் எனும் (நான் இருக்கிறேன் என்ற சத்தான) சமானந் தன்னை (சாமான்யமான ஆதாரமான பிரமத்தை) [ஆவரண சக்தியான] அஞ்ஞானம் மறைத்திடாது. பகர் (வெளி) விசேடமதாம் சீவன் பரம் எனும் அதனை (அதிட்டானத்தை) மூடும்.

சீடன் விடாம யோசிக்கிறது குருவுக்கு தெரியுது. சீடன் மனசில ஓடறதை உணர்ந்து மேலே சொல்கிறார்:

திட்டினா விட்சேப சக்தியை தானே திட்டணும்? அதுதானே சும்மா கிடந்த பிரம்மத்தின் தமஸ் பகுதியை நாம் பாக்கிற இத்தனை விஷயங்களா காட்டி இது வேற ன்னு தோண வெச்சது? பிரம்ம நிலை மட்டுமே இருந்து வேறு ஒண்ணும் இல்லைனா இப்படி குழப்பம் வந்து இருக்காதே? நீங்க பாட்டுக்கு ஆவரணம்தான் மறைச்சதுன்னு குத்தம் சொல்லறீங்களே! விட்சேப சக்தி பிரச்சினை பண்ணலியா? இப்படி நினைக்கிறாய் இல்லையா? கேளு!

53.
ஆத்ம ஞானத்தை விட்சேப சக்தியானது அன்னமய கோசம் முதலியனவாகத் தோன்றி மறைத்ததே அன்றி ஆவரணமெங்கே மறைத்தது?
கேவல நிலைதோன் றாமற் கெடுத்தது பஞ்ச கோசம்
சீவனுஞ் சகத்து மாகிச் செனித்தவிட்சேப மன்றோ
ஆவர ணந்தா னேபா ழனர்தமென் றுரைத்த தேதோ
மேவருங் குருவேயென்று வினாவிடின் மகனே கேளாய்

பஞ்சகோசம் சீவனும் சகத்தும் ஆகி செனித்த (உண்டாகிய) விட்சேபம் [சக்தி] அன்றோ கேவல நிலை (பிரம ஆன்ம ஐக்கிய நிலை) தோன்றாமல் கெடுத்தது.
ஆவரணந்தானே (ஆவரண சக்திதானே) பாழ் [என்றும்] அனர்தம் [என்றும்] உரைத்தது (செய்தது) ஏதோ? (என்ன காரணத்தாலோ?) மேவரும் (கிடைத்தற்கரிய) குருவே என்று வினாவிடின், மகனே கேளாய்.


No comments: