Pages

Tuesday, March 24, 2009

ஞானம் -மறதி போதல்



63.
புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை
எண்ணுநீ தசமனாவை யென்னவே தன்னைக் காணல்
கண்ணினிற் கண்டஞானங் கரைதல்போ வதுநோய்போதல்
திண்ணிய மனதி லையந் தெளிதலா நந்த மாமே

புண்ணிய பதிகன் பின்னும் (மீண்டும்) புருடர் ஒன்பதின்மர் தம்மை எண்ணு; நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்) கரைதல் (அழுதல்) போவது நோய் போதல். திண்ணிய (திடமான) மனதில் ஐயம் தெளிதல் ஆநந்தமாமே.

இதுல கவனிக்க வேண்டியது இவனுக்கு புதுசா ஒண்ணும் கிடைக்கலை. அவனோட அறியாமைதான் பிரச்சினை. உண்டான அனர்த்தமெல்லாம் மூடத்தனமான மறதியால வந்தது.

ஒத்தர் கணினியிலே நிறைய படங்கள் சேத்து வெச்சு இருந்தார். ப்ளாக்ல போட ஆசை ஆசையா சேத்தது. ஒரு நாள் குறிப்பிட்ட ஆனை படத்தை தேடினா காணோம். எங்கே சேமிச்சோம்னு நினைவுக்கு வரலை. செர்ச்சில் *.ஜேபெக், *.பிஎம்பி ன்னு தேடித்தேடி பாத்து கிடைக்கலை. கடைசியா பார்மாட் செய்தப்ப போயிடுச்சோன்னு வருத்தப்பட்டார். சில நாட்கள் கழிச்சு வேற எதோ தேடறப்ப எதேச்சையா இது கிடைக்குது. அட! அத பத்திரமா இருக்கனும்ன்னு தனியா ஒரு அடைவில டிஃப் பார்மேட் ல சேமிச்சோம். மறந்தே போயிடுத்து இப்ப கிடைச்சதேன்னு ஒரே சந்தோஷம்!

அது கணினியிலேதான் இருந்தது. காணாம போகலை. ஆனா மறதியால இல்லைன்னு நினைச்சார். மறதி போனதும் மகிழ்ச்சி வந்தது.

இதே போலத்தான் நாமும் நாம் உண்மையில யார் என்கிறதை மறந்து போகிறோம். ஞானம் அடைகிறவங்க புதுசா ஒண்ணையும் அடையலை. அஞ்ஞானம் போனதால நாம் யாருன்னு விளங்கிடும்.


¨ ஹிஹிஹி! படத்தை நானேதான் அங்க சேமிச்சேன். மறந்துட்டேன்!¨ னு அவசி க்கிற மாதிரி ஞானம் வந்தவங்க ¨அட! இதான் நான். இல்லைன்னு நினைச்சது அறியாமைன்னு சிரிப்பாங்க. மேலும் நம்மோட மன மயக்கத்தாலேதானே இந்த நிலையாத பொருளை எல்லாம் - நித்தியமில்லா உலக தொல்லைகளை எல்லாம் நிஜம்ன்னு நம்பினேன்; படாத பாடுபட்டேன். ஆகா! அதே போல இப்பவும் எத்தனைப்பேர் நாம் இத்தனைக்காலம் இருந்தது போல அதே மயக்கத்திலே சிக்கி கஷ்டப்படுறாங்க! இது பெரிய வேடிக்கையே¨ ன்னு நினைப்பாங்க.

தூங்கி, கெட்ட கனவு கண்டவன் அலறி எழுந்து ¨ச்சே! கனவுதானா¨ ன்னு அ.வ.சிரிச்சுப்பானோ அதே போல ஞானியும் உலகை பொய் தோற்றம் ன்னு புரிஞ்சு அதனால் பாதிப்பு இல்லாம இருப்பார்.

ம்ம்ம்ம்ம்..அங்கே சிலர் ஒரு கேள்வி கேக்கிறது புரியுது!

கனவு கண்டபோது ரொம்பவே உண்மை போல இருந்தது ஒத்துக்கறேன். ஆனா தூக்கத்திலேந்து எழுந்த பிறகு அது கனவு புரிஞ்சுடும். அப்ப அந்த கனவுக்காட்சிகள் தென் படாதே! ஆனா உலகம் அப்படி இல்லையே! கனவு போல் உலகம்ன்னு புரிஞ்சாக்கூட அந்த உலகம் தென்படாம இருக்காதே. அப்படித்தானே சொல்கிறாங்க? இல்லைனா எந்த ஞானியும் இந்த உலகத்திலே நடமாட முடியாதே?
அருமையான கேள்விங்க. எப்படி பாராட்டறதுன்னே புரியலை! :-))

நல்ல வெயில் காலம் வந்தாச்சு. ரோட்டிலே போறோம். அட ரோட்டிலே தண்ணி ன்னு நினைக்கறோம். அட இல்லை இதுதான் கானல் நீர் ன்னு தெளிகிறோம். அப்ப அந்த பொய்யான கானல்நீர் தெரியுதா இல்லையா? தெரியும். ஆனாலும் அதே நேரம் அது பொய் ன்னும் தெரியும்!
அப்படி ஞானிக்கு இந்த உலகங்களும் தெரியும். அதே நேரம் அதெல்லாம் பொய் ன்னும் தெரியும்! அதனால நடக்கிற விஷயங்களேந்து விலகி நின்னு பாக்க முடியும்.
---

சீடன் இப்ப டக்குன்னு பிடிச்சுகிட்டான்.
¨சாமி! பத்தாவது ஆளை பாருன்னு வழிப்போக்கன் காட்டி துக்கம் நிவிருத்தி பண்ணினா மாதிரி என்னை - என் நிஜ ரூபத்த - எனக்கு காட்டி என் துக்கத்த போக்குங்களேன்!¨ அப்படிங்கறான்.

பையன் ரெடியாயிட்டான்னு உணர்ந்து குரு அவனுக்கு மகா வாக்கிய உபதேசம் செய்யப்போறார்.
ஸாம வேத மஹா வாக்கியமான தத் துவம் அஸி என்பதை உபதேசிக்கிறார்.
தத் என்பது பிரம்மத்தை குறிக்கிறது.
த்வம் என்கிறது நீ. இந்த இடத்திலே கூடஸ்தனை குறிக்குது.
இந்த ரெண்டுத்தையும் அஸி என்கிறது ஒண்ணா சேக்குது.
அது நீயாக இருக்கிறாய்!

64.
தன்னை தரிசிப்பிக்க வேண்டுமென்று சீடன் வினவியதற்கு விடை:

தசபுமான் றனைக்கண்டாற்போற் சற்குரு மூர்த்தியேயென்
நிசவடிவினை யான்காண நீர்காட்டல் வேண்டுமென்றான்
சுசிபெறு மிலட்சியார்த்தந் துவம்பதந் தற்பதங்கட்
கசிபத வைக்கியஞ் செய்யுமது செயுமுண்மை கேளாய்

தசபுமான்தனை கண்டால் போல், சற்குரு மூர்த்தியே, என் நிச வடிவினை யான் காண நீர் காட்டல் வேண்டுமென்றான். "துவம்" பதம் "தத்" பதம் (ஸாம வேத மஹா வாக்கியமான த்வம் (நீ) தத் (அது) பதங்களின்) சுசி பெறும் இலட்சியார்த்தங்கட்கு (சுத்தம் பொருந்திய இலட்சிய அர்த்தங்களான கூடஸ்த பிரமங்கட்கு) அசி பதம் (இருக்கிறாய் என்ற சொல்) ஐக்கியம் செய்யும். (ஐக்கிய சொரூபத்தை இலட்சணையால் போதிக்கும்) அது செயும் உண்மை (அவ்வாக்கியம் அப்படி போதிக்கும் உண்மையை) கேளாய்.



1 comment:

Geetha Sambasivam said...

//ஒரு நாள் குறிப்பிட்ட ஆனை படத்தை தேடினா காணோம். எங்கே சேமிச்சோம்னு நினைவுக்கு வரலை. செர்ச்சில் *.ஜேபெக், *.பிஎம்பி ன்னு தேடித்தேடி பாத்து கிடைக்கலை. கடைசியா பார்மாட் செய்தப்ப போயிடுச்சோன்னு வருத்தப்பட்டார். சில நாட்கள் கழிச்சு வேற எதோ தேடறப்ப எதேச்சையா இது கிடைக்குது. அட! அத பத்திரமா இருக்கனும்ன்னு தனியா ஒரு அடைவில டிஃப் பார்மேட் ல சேமிச்சோம். மறந்தே போயிடுத்து இப்ப கிடைச்சதேன்னு ஒரே சந்தோஷம்!//

:))))))))))))))