Pages

Friday, March 27, 2009

ஈசன் - ஜீவன்


அப்ப ஆனந்தமே பிரம்மம்!
இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது.
.....
இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.
பிரம்மத்தை அறியறதுல இது ஒரு படிதான். ப்ரம்மத்தை இதுதான்னு அறுதியிட்டு சொல்ல முடியாது. அது மனசையும் வாக்கையும் கடந்தது! ¨யதோ வாசோ நிவர்த்தந்தே; அப்ராப்ய மனசா சஹ¨ என்கிறது இதே உபநிஷத்.மனசும் வார்த்தைகளும் பிரம்மத்தை எட்டப்போய் முடியாமல் திரும்பிடறதாம்!

சரி நம்ம கேசுக்கு வரலாம்.
பிரம்மம் எதுன்னு தெரியாட்டாலும் எது இல்லைன்னு புரிஞ்சுக்கலாம்.

ஜீவனும் ஈசனும் மாய சம்பந்தமுடையவர்கள்.
ஈசன் சத்வ குண மாயை.
ஜீவன் ரஜோ குண மாயை. அதாவது அசுத்த மாயை.
ஈசன் மாயையை தன் வசப்படுத்தினவன். ஜீவன் மாயை வசப்பட்டவன். இரண்டு பேரும் மாயா சம்பந்தம் உடையவர்களே! ஈசனுக்கும் ஜீவனுக்கும் என்ன ஏணி வெச்சாலும் எட்ட முடியாது! அதாவது என்ன ஆன்ம முன்னேற்றம் கண்டாலும் ஈசனுக்கு ஜீவன் சமமா ஆக முடியாது. ஒப்பிடவே முடியாது! ஈசனுடைய சர்வத்துவம் கிட்ட அணுகக்கூட ஜீவனால் முடியாது!
ஜீவன் பிண்டத்திலே இருக்கன். ஈசன் அண்டத்திலே!
ஜீவன் காரிய உபாதி ஈசன் காரண உபாதி! (அதாவது ஈசன்தான் பிறப்பிக்கிறான்; உண்டாக்குபவன். சீவன் பிறக்கிறான்; உண்டாகிறவன்.)
ஜீவன் வியக்தி தேகம் உள்ளவன். ஈசன் சமஷ்டி தேகம் உள்ளவன்.
ஜீவன் அற்ப ஞானம் உள்ளவன். ஈசன் சர்வஞ்ஞன். எல்லாம் தெரியும்!

ஆனால் கூடஸ்தனும் பிரம்மமும் மாயா சம்பந்தமில்லாதவை. பாலில் இருக்கிற நெய் போல கலந்தே இருக்கும்.
நாம் அஞ்ஞானிகளாக இருப்பதால ஜீவனும் ஜீவ சாட்சியான கூடஸ்தனும் ஒண்ணேன்னு நினைக்கிறோம். அதனாலதான் மத்தால கடைஞ்சு நெய்யை தனியா எடுக்கிறாப் போல விவேகமாகிய மத்தால கடைஞ்சு உன்னை சீவ சாட்சியேன்னு அறிஞ்சு கொள்ன்னு ஆசிரியர் சொன்னார்.

திருமுறை 5. பதிகம் : 090 பொது: பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

பொழிப்புரை:

விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.
அப்பர் சொன்னது!

மாயையான மனசோட இருக்கிறோம். ஆதனால சீவனா இருக்கோம். அது நம்மோட உண்மையா நிலை இல்லை. மனசை எப்போ அழிச்சு அல்லது பிரிஞ்சு மனசோட சேட்டைகளை பாக்கிறோமோ அப்ப கூடஸ்தனா இருப்போம். அதுவே நம்மோட உண்மையா சொரூபம். இதை பார்க்க கத்துக்கொண்டா நமக்குள்ள மறைஞ்சு இருக்கிற பரமாத்ம சொரூபம் தெரியும். அதை உணர முடியும்.

இது என்னவோ ரொம்ப கஷ்டம்ன்னு தோணினாலும் உண்மையில் அவ்வளவு கஷ்டமில்லை.
ஒரு இடத்தில சௌகரியம் போல உக்காருங்க. ஆழந்த மூச்சு எடுத்து விடுங்க - நாலஞ்சு தரம்.
இப்ப மனசை கவனியுங்க! அது என்ன நினைக்குது? எங்கே போகுது? எங்கிருந்து வந்தது? வேடிக்கை பாருங்க.
மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்!

அட! இவ்வளோ சுலபம்னா ஏன் நிறைய ஞானிகள் இல்லை?
ஏன்னா நம்மாலே இதை அப்படியே நிறுத்த முடியாது. மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்- அப்படி சொன்னேன் இல்லையா? இப்ப ¨அட! மனசு நின்னுடுச்சு¨ன்னு ஒரு எண்ணம் வரும்!
நம்மையே அறியாம இன்னொரு எண்ணம் கிளர்ந்து மனசை ஆக்கிரமிச்சுடும்! இல்லை, எந்த எண்ணத்தை பாத்தோமோ அதை தொடர்ந்தே இன்னொன்னு வந்துடும். வேடிக்கை பாக்கிறதே இன்னொரு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதான் வாசனைகளோட சக்தி! விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
ஆனா ஒண்ணு. இதை பண்ணிப்பாத்தா மனசு வேற நாம் வேறன்னு புரிஞ்சுடும்!

இந்த தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை சரியா புரிஞ்சுக்கணும்.
இது நீயே கடவுள் ன்னு சொல்லலை. (சமீப சினிமா ஒண்ணுக்கு பெயரிலே அப்படி அர்த்தம் பண்ணி போட்டு இருக்காங்க; அஹம் பிரம்மாஸ்மி- நான் கடவுள்).

சரியான பொருள் என்ன?

¨நீ பிரம்மத்தின் ஒரு அம்சமே. பிரம்மத்தைப்போல சத் சித் ஆனந்தம் உள்ளவனே! அதாவது ஒரே இனமே. ஆகயால் நான் பிரம்மமே என்ர திடமான சித்த்தோட அந்த பரம் பொருளிலே கலந்து நான் என்கிற நினைப்பை நீக்கினால் அந்த அகண்டமான சொரூபம் உன்னை தன் வயப்படுத்திக்கும். அதாவது தானாக்கிக்கும். நீயும் பிரம்மமா ஆவாய்.¨

இந்த ¨நான்¨ ஒழிந்து எப்போ நான் பிரம்மம் ன்னு திடசித்தம் வருமோ அது வரை முக்தி இல்லை.
PG:
தானே சிவன்சிவனை நானென்று நாடி வெறுந்
தானாகி நின்றநிலை தானன்றோ- வானாப்
பவசலதி நீந்திவரும் பண்புடைய மாணா
சிவலோக மென்றே தெளி
(உபதேச மாலை- சிவயோகம்)

சிவத்தோ மசியுண்ணி னைந்துசிவ யோகநிட்டை
சவுக்கியதா னத்தேறித் தான் (சித்தாந்த தரிசனம்- சிவ யோகவியல்)
சிவம் தோம் அசி (நீ சிவமாய் இருக்கிறாய்) உள் நினைந்து சிவ யோகநிட்டை....

சீவனத்தால் சீவனென்னல் சீலகிறந்தாலிந்தச் சீவனே யந்த சிவம்
அந்த சிவநம்மை யன்றியிலை யென்றேர்தலுந்துஞ் சிவயோக மோர் (சித்தாந்த தரிசனம்- பாப விமோசனவியல்)

சிவன் வேறு, சீவன் வேறு என்று இரண்டாய்ச் செப்பும்
அவன் சிவனை என்றும் அறியாதான் -தவமில்லா
உள்ளத்தார்க்கு எய்துமோ ஊர்குருவி ஆகாசம்
எள்ளப் பறந்து அறியுமே. (சிந்தனை வெண்பா -தக்ஷிணா மூர்த்தி துதி)

அதுவே நீயாம் என்று அரு மறைகள் சொல்லும்.
எதிர் சிவனே நீயானாய் என்னும் முது சைவம்.
வேறோ வேறன்றோ சொல் வேதியனே! விண் விசும்பும்
வேறோ வேறன்றோ விளம்பு (சிந்தனை வெண்பா)

4 comments:

Geetha Sambasivam said...

//விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
ஆனா ஒண்ணு. இதை பண்ணிப்பாத்தா மனசு வேற நாம் வேறன்னு புரிஞ்சுடும்!//

இது நல்லாவே புரியுது, சிந்தனை வெண்பாவும், தக்ஷிணாமூர்த்தி துதியும் எங்கே கிடைக்கும்?? இதுவரை கேட்டதில்லை. உபதேசமாலை படிச்சதில்லை, ஆனால் கேள்விப்பட்டதுண்டு.

திவாண்ணா said...

//இது நல்லாவே புரியுது,//

இனி எல்லாமே சுலபம்தான். மூலப்ப்ரக்ருதில ஆரம்பிச்சது எல்லாரையும் ஒரு கலக்கு கலக்கிடுத்து போல இருக்கு!

// சிந்தனை வெண்பாவும், தக்ஷிணாமூர்த்தி துதியும் எங்கே கிடைக்கும்??//
தக்ஷிணாமூர்த்தி துதி சிந்தனை வெண்பாவிலே வர முதல் சில ஸ்லோகங்கள்ன்னு நினைக்கிறேன்.
எங்கே கிடைக்கும்ன்னு தெரியலை. தேடணும். தெரிஞ்சவங்க யாரும் சொல்லலாம். வலையிலே இல்லை.
// உபதேசமாலை படிச்சதில்லை, ஆனால் கேள்விப்பட்டதுண்டு.//

அதையும் இங்கே உசாத்துணை புத்தகத்திலே பாக்கிறதுதான். உபதேச ரத்ன மாலைன்னு ஒரு வைணவ கிரந்தம். இது அது இல்லேன்னு நினைக்கிறேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

சுவாசம் அடங்குகிற இடத்தில் மனமும் ஒடுங்கும், என்பது உண்மைதான். ஸோ ஹம்னு சொகமா எல்லோரும் இருக்க முடிஞ்சா அப்புறம், வம்பேது, வழக்கேது?!

திவாண்ணா said...

//ஸோ ஹம்னு சொகமா எல்லோரும் இருக்க முடிஞ்சா அப்புறம், வம்பேது, வழக்கேது?!//
கி.மூ ஐயா நீங்க சொல்கிறது வாஸ்தவம்! அப்படி இருக்க முடியாததுதான் அவன் விளையாட்டு இல்லையா?