Pages

Monday, March 2, 2009

மீள் பார்வை -சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகள் ஞான இந்திரியங்கள்



5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.

சரியா?
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து அந்தக்கரணம் உருவாகும்.
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து ஞான இந்திரியங்கள் - புலன்கள் உருவாகும்.

அந்தக்கரணம் பத்தி இங்கே பாத்தோம். இது ஒண்ணே ஆனாலும் செய்கிற வேலையின் தன்மை படி ஐந்தா இருக்குன்னு பாத்தோம். அதான் சமஷ்டி சமாசாரம்!

ஞான இந்திரியங்கள் அஞ்சு.
காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

நாம நினைவு வைக்க வேண்டியது இதெல்லாம் நாம் பார்க்கிர கண் காது மூக்கு இல்லை.
கண் இருந்தாலும் பாக்கமுடியாம இருக்கலாம். காது இருந்தாலும் கேட்க முடியாம இருக்கலாம். அதே போல வாசனை தெரிய முடியாம இருக்கலாம். இது பிறவிலேந்தும் இப்படி குறை இருக்கலாம். அல்லது பிற்காலத்திலும் ஏற்படலாம்.
பின்னே கண் காது மூக்கு இருந்தும் எப்படி அதெல்லாம் இயங்கலை?

நம் நாட்டு தத்துவப்படி கண் சும்மா பாக்காது. காது சும்மா கேட்காது. அந்தந்த புலன்கள்லேந்து ஒரு சக்தி கிளம்பி பொருளை தொடணும். தொட்டு திரும்பி அதே புலனுக்கு வரணும். அப்பதான் அந்த செயல் பூர்த்தி ஆகும்.
இந்த ஏதோ ஒரு சக்திதான் மேலே பார்த்தல் கேட்டல் ன்னு பாத்த சத்வ குண சக்தி.
ஞான புலன்கள் இந்த சக்திகள்தான்.

இந்த அந்தக்கரணங்களும் ஞான இந்திரியங்களும் சத்வ குணத்திலேந்து வந்ததாலே ஞானத்துக்கு சாதனமா - ஞானம் அடைய உதவுகிற கருவிகளா- ஆகும்.

37.
தன் மாத்திரையின் சத்துவ குணத்தில் அந்தக்கரண ஞானேந்திரிய உற்பத்தி:

ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும்
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவியாகும்
ஓதிய பின்னை யைந்து முளம்புத்தி யிரண்டா ஞான
சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே

ஆதிமுக்குணம் (தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும்) இப்பூத மடங்கலும் (இத் தன்மாத்திரைகள் ஐந்திலும்) தொடர்ந்து (கூடி) நிற்கும். கோதில் (குற்றமில்லாத) வெண் குணத்தில் (சத்துவத்தில்) ஐந்து கூறு உணர் கருவியாகும். (ஞானேந்திரியங்கள்). ஓதிய (சொல்லப்பட்ட) பின்னை ஐந்தும் உளம் புத்தி இரண்டாம் (மனம் புத்தி எனும் இரு பரிணாமம் உடைய அந்தக்கரணமாம்). இவ்வேழும் சற்குணப் பிரிவினாலே (சத்துவ குண அம்சமானதால்) ஞான சாதனமாம் (ஞானேந்திரியங்கள், அறி கருவிகள்).
--
நினைவுறுத்தல்: தன்மாத்திரைகள் ஐந்து- ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண். ஞானேந்திரியங்கள் ஐந்து- காது, மூக்கு, கண், நாக்கு, தோல்
--

3 comments:

Kavinaya said...

ம்... படிச்சுட்டேன்.

Kavinaya said...

ம்... படிச்சுட்டேன்.

Geetha Sambasivam said...

நம் நாட்டு தத்துவப்படி கண் சும்மா பாக்காது. காது சும்மா கேட்காது. அந்தந்த புலன்கள்லேந்து ஒரு சக்தி கிளம்பி பொருளை தொடணும். தொட்டு திரும்பி அதே புலனுக்கு வரணும். அப்பதான் அந்த செயல் பூர்த்தி ஆகும்.
இந்த ஏதோ ஒரு சக்திதான் மேலே பார்த்தல் கேட்டல் ன்னு பாத்த சத்வ குண சக்தி.
ஞான புலன்கள் இந்த சக்திகள்தான்.//

இதை மட்டும் புரிஞ்சுக்க முடியறது,

பின்னாலே இருக்கும் பதிவுகளுக்குப் போகமுடியலை, ஏன்னு புரியலை, சிலது விட்டுப் போயிருக்கு!